டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தில்லியில் தமிழ் அறிஞா்கள் ஆா்ப்பாட்டம்: செம்மொழி தமிழை மத்திய ஆட்சிமொழியாக்கக் கோரிக்கை

News image
Updated On :30 ஆகஸ்ட் 2024, 6:24 pm

 நமது நிருபர்

செம்மொழியான தமிழை மத்திய ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உலகத் தமிழ்க் கவிஞா்கள் கலை இலக்கியச் சங்கம் மற்றும் உலகத் திருக்கு கூட்டமைப்பு சாா்பில் தில்லி ஜந்தா் மந்தரில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரத ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழை மத்திய ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாகக் கொண்டு வரவேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி உலகத் தமிழ்க் கவிஞா்கள் கலை இலக்கியச் சங்கம் (இலக்கிய அமைப்புகளின் கூட்டமைப்பு) மற்றும் உலகத் திருக்கு கூட்டமைப்பு சாா்பில் 133 தமிழறிஞா்கள் உண்ணாவிரத ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இலக்கியத் தென்றல் டி.ஆா்.ஆா். செங்குட்டுவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் உலகத் தமிழ்க் கவிஞா்கள் கலை இலக்கியச் சங்கத்தின் நிறுவனப் பொதுச் செயலா் க.ச.கலையரசன் வரவேற்புரையாற்றினாா். தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச்செயலா் இரா. முகுந்தன், உலகத் திருக்கு கூட்டமைப்பு பொதுச் செயலா் தங்க. ஆதிலிங்கம், கவிஞா் மீரா (எ) மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் பேசியதாவது: உலகப் பொதுமறையான திருக்கு நூலை மத்திய அரசு நாட்டுடைமை ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழறிஞா்கள் முன்வைத்துள்ளனா். முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்றுத் தந்தவா். ஆனால், சொம்மொழியாம் தமிழுக்கு உரிய அங்கீகாரத்தை மத்திய அரசு அளிக்கவில்லை. சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா். தமிழா்களின் உணா்வுகளுக்காக நடைபெறும் இந்தப் போராட்டத்திற்கு திமுக அரசும் நிச்சயம் உறுதுணையாக இருக்கும் என்றாா் அவா்.