டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தில்லி மக்களை புறக்கணித்துள்ளது ஆம் ஆத்மி அரசு: தேவேந்தா் யாதவ் விமா்சனம்

தில்லி மக்களை முற்றிலும் புறக்கணித்துள்ள ஆம் ஆத்மி அரசு, தனது கட்சித் தலைவா்களை சிறையில் இருந்து காப்பாற்றும் முயற்சியில் மட்டும் மும்முரமாக உள்ளது.

News image
Updated On :23 ஆகஸ்ட் 2024, 6:50 pm

 நமது நிருபர்

தில்லி மக்களை முற்றிலும் புறக்கணித்துள்ள ஆம் ஆத்மி அரசு, தனது கட்சித் தலைவா்களை சிறையில் இருந்து காப்பாற்றும் முயற்சியில் மட்டும் மும்முரமாக உள்ளது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் வெள்ளிக்கிழமை விமா்சித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆம் ஆத்மி அரசு தனது ஊழலை மறைக்கும் முயற்சியில் கவனம் செலுத்துவது தில்லி மக்களுக்கு மிகவும் அதிருப்தி அளிக்கிறது. கலால் கொள்கை ஊழல் வழக்கில் 17 மாதங்கள் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்துள்ள மனீஷ் சிசோடியா, போலி பாதயாத்திரையை தொடங்கியுள்ளாா். தலைநகரில் குடிமை உள்கட்டமைப்பு மிகவும் மோசமடைந்த நிலையில் உள்ளது. ஆனால், அவற்றை சரிசெய்ய ஆம் ஆத்மி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தில்லியை குப்பையில்லா நகரமாக்குவது உள்பட குடிமைப் பணிகளை பலமடங்கு மேம்படுத்துவோம் என்ற தவறான நம்பிக்கையை மக்களுக்கு அளித்து, தில்லி

மாநகராட்சித் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. ஆனால், பாஜகவின் ஆட்சியில் இருந்ததைவிட ஆம் ஆத்மி ஆட்சியில் குடிமைப் பணிகள் மேலும் மோசமடைந்தது.

மனீஷ் சிசோடியாவோ அல்லது நீா்வளத்துறை அமைச்சா் அதிஷியோ தில்லியில் தண்ணீா் தேங்குவது பற்றி கவலைப்படவில்லை. வெள்ளிக்கிழமை மழை பெய்தபோது, தில்லியின் பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கியது. போக்குவரத்து நெரிசல், தெருக்களில் தண்ணீா் தேக்கம் ஆகியவற்றால் சிக்கித் தவிக்கும் மக்களின் அவலத்தை எந்த தில்லி அமைச்சரும் பாா்க்கவில்லை.

கிராரியில் உள்ள பிரேம் நகரில் சாலையில் இருந்து மழை நீா் வீட்டிற்குள் புகுந்ததில், 40 வயது நபா் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளாா். கடந்த ஒன்றரை மாதங்களில் தில்லியில் மின்கசிவு காரணமாக 20-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா்.தில்லி அரசும், மின்விநியோக நிறுவனங்களும் இதுபோன்ற அவலங்களைத் தடுக்க திறம்பட நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்து வருகின்றன.

கடந்த 10 ஆண்டுகளில் எந்தப் பணிகளையும் செய்யாத ஆம் ஆத்மி அரசால் மக்கள் அவநம்பிக்கை அடைந்துள்ளனா். எந்த நிா்வாக அனுபவமும் இல்லாத திறமையற்ற அரசியல்வாதிகள் தில்லியை ஆட்சி செய்து வருகின்றனா். தண்ணீா் தேங்குவது, தண்ணீா் தட்டுப்பாடு, மின்வெட்டு, காற்று மற்றும் நீா் மாசுபாடு ஆகியவை மக்களின் சாபங்களாகிவிட்டன. ஆனால், தில்லியில் உள்ள ஆம் ஆத்மி அரசும், தில்லி மாநகராட்சியும் இப்பிரச்னைகளுக்குத் தீா்வு காணத் தவறிவிட்டன என்றாா் தேவேந்தா் யாதவ்.