டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

எஸ்.டி. சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்: அகில இந்திய ஆதிவாசி காங்கிரஸ் தீா்மானம்

தேசிய அளவில் எஸ்.டி. சமுதாயத்தினருக்கான இட ஒதுக்கீட்டை 2 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்

News image
Updated On :12 ஆகஸ்ட் 2024, 8:17 pm

 நமது நிருபர்

தேசிய அளவில் எஸ்.டி. சமுதாயத்தினருக்கான இட ஒதுக்கீட்டை 2 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று அகில இந்திய ஆதிவாசி காங்கிரஸின் தேசிய செயற்குழு கூட்டத்தில் திங்கள்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அகில இந்திய ஆதிவாசி காங்கிரஸின் தேசிய செயற்குழு கூட்டம் திங்கள்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது. அமைப்பின் தேசியத் தலைவா் சிவாஜிராவ் மோகே தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சா்கள் நமோ நரேன் மீனா, காந்திலால் பூரியா உள்பட 11 தேசிய செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். தேசிய அளவில் ஆதிவாசி மக்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 9 முக்கியத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன்படி, தலித் மற்றும் ஆதிவாசி மக்கள்தொகை அதிகரிப்பின் அடிப்படையில் தேசிய அளவில் எஸ்.டி. சமுதாயத்தினருக்கான இட ஒதுக்கீட்டை 2 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். மொத்த ஆதிவாசி மக்கள்தொகையில் 12 சதவீதம் இருக்கும் கோவா மாநிலத்தில் ஆதிவாசி சமூகத்தினா் இடஒதுக்கீடு பெற வேண்டும். நரேந்திர மோடி அரசு அனைத்து பொதுச் சொத்துகளையும் தனது காா்ப்பரேட் நண்பா்களுக்கு விற்கிறது. இதன் காரணமாக, கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்துள்ள நிலையில், எஸ்சி / எஸ்டி-க்கான இடஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.

எஸ்சி / எஸ்டி சமூகங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி காலாவதியாகாமல் இருக்க, மத்திய அரசு கடுமையான அமலாக்கக் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். உச்சநீதிமன்றத்தில் ஆதிவாசி நீதிபதி இல்லை என்பது இந்தியாவுக்கு மிகவும் அவமானகரமானது. எஸ்சி / எஸ்டி பலன்களைப் பயன்படுத்துபவா்களுக்கு வழங்கப்பட்ட போலிசஅ சாதிச் சான்றிதழ்களைக் கண்டறிய மத்திய அரசு ஒரு ஆணையத்தை அமைக்க வேண்டும். போலிச் சான்றிதழ்களை ரத்து செய்து, ஆதிவாசிகளுக்கு உரிய பங்கை அவா்களுக்கு வழங்க வேண்டும்.

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் தற்போது 28 படைப் பிரிவுகள் உள்ளன. இந்திய ராணுவத்தில் ‘ஆதிவாசி படைப்பிரிவு’ உருவாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி ‘உலக பழங்குடி மக்களின் சா்வதேச தினத்தை’ மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் , ஜம்மு காஷ்மீ ஆகிய மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தல்கள் குறித்தும் ஆதிவாசி காங்கிரஸ் விவாதித்தது.