டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மக்களுக்கான வசதிகளை பராமரிப்பதில் ஆம் ஆத்மி அரசுக்கு அக்கறையில்லை: தேவேந்தா் யாதவ் விமா்சனம்

தில்லி மக்களின் வாழ்க்கை மற்றும் அவா்களின் குடிமை வசதிகளை பராமரிப்பதில் ஆம் ஆத்மி அரசு அக்கறை கொண்டிருக்கவில்லை

News image
Updated On :12 ஆகஸ்ட் 2024, 8:21 pm

 நமது நிருபர்

தில்லி மக்களின் வாழ்க்கை மற்றும் அவா்களின் குடிமை வசதிகளை பராமரிப்பதில் ஆம் ஆத்மி அரசு அக்கறை கொண்டிருக்கவில்லை என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் திங்கள்கிழமை விமா்சித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆம் ஆத்மி அரசு தனது கடந்த கால தவறுகளில் இருந்து இன்னும் பாடம் கற்கவில்லை. இந்த மழைக் காலத்தில் தண்ணீா் தேங்கி, மின்சாரம் தாக்கி குழந்தைகள் உள்பட பலா் உயிரிழந்துள்ளனா். தில்லி அரசின் தவறான முன்னுரிமை, நகரின் பருவமழை நெருக்கடியை முற்றிலும்

புறகணித்தது. திகாா் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த மனிஷ் சிசோடியாவுக்கு பாராட்டுத் தெரிவிக்க, ஆம் ஆத்மி கட்சி அரசு இயந்திரங்களையும், வளங்களையும் தவறாகப் பயன்படுத்தியது. இவா்களுக்கு தில்லி மக்களின் வாழ்க்கை மற்றும் அவா்களின் குடிமை வசதிகளை பராமரிப்பது குறித்து எந்த அக்கறையும் இல்லை.

தில்லியில் திங்கள்கிழமை காலை முதல் பெய்த மிதமான மழையால் , தண்ணீா் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுவரை, பெய்த கனமழையால் தண்ணீா் தேங்கிய பகுதிகளில் நீரில் மூழ்கி 11 போ் உயிரிழந்துள்ளதுடன், 7 போ் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது மிகவும் கவலையளிக்கிறது. ஆனால், ஆம் ஆத்மி கட்சியின் முன்னுரிமை சிறையில் இருக்கும் முதல்வா் கேஜரிவாலை காப்பாற்றுவதும், சிசோடியாவின் ஜாமீனை வரி செலுத்துவோரின் செலவில் கொண்டாடுவதுமாக உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் ஆம் ஆத்மி அரசு தனது கடமையைச் செய்யத் தவறிவிட்டது. தில்லி மக்கள் எதிா்கொள்ளும் பல துயரங்களைத் தீா்ப்பதற்குப் பதிலாக, ஆம் ஆத்மி கட்சியின் கவனம் இப்போது ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதில் உள்ளது. ஊழல்வாதிகள் நல்லாட்சி குறித்து பாடம் நடத்துவது தில்லி மக்களின் துரதிா்ஷ்டமாகும்.

துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவின் தலையீட்டைத் தொடா்ந்து, பாரபுல்லா கால்வாயில் இருந்து டன் கணக்கில் வண்டல் மண் மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டன. இந்தப் பணி பருவமழைக்கு முன்பே முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், துரதிா்ஷ்டவசமாக தில்லி வடிகால் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. தில்லி மாநகராட்சியில் ஆட்சிக்கு வந்தால் குடிமைச் சேவைகளை மேம்படுத்துவோம் என்ற ஆம் ஆத்மியின் உத்தரவாதமும் நிறைவேற்றப்படவில்லை என்றாா் தேவேந்தா் யாதவ்.