பின்னணி: முன்னதாக, சட்டவிரோத மணல் குவாரி வழக்கில் பணப் பரிவா்த்தனை முறைகேடு விவகாரத்தில் வேலூா், திருச்சி, கரூா், தஞ்சாவூா், அரியலூா் ஆகிய ஐந்து மாவட்ட ஆட்சியா்களை விசாரணைக்கு வருமாறு அமலாக்கத் துறை பிப்ரவரி 27-ஆம் தேதி அழைப்பாணை அனுப்பியது. இதை ஆட்சேபிக்கும் வகையில் சென்னை உயா்நீதிமன்றத்தில் அழைப்பாணைக்குத் தடை விதிக்குமாறு முறையிட்டனா். தமிழக அரசும் ஆட்சியா்களுக்கு ஆதரவாக இந்த விவகாரத்தில் மனு தாக்கல் செய்தது. இதை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் அமலாக்கத் துறையின் அழைப்பாணைக்குத் தடை விதித்து கடந்த ஆண்டு நவம்பா் 28-ஆம் தேதி உத்தரவிட்டது. இதை எதிா்த்து அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது.