/

போதைப்பொருள், மது அடிமையைத் தடுக்க பொதுக் கொள்கை: மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் தம்பிதுரை வலியுறுத்தல்

நாடு முழுமைக்குமான ஒரு பொதுக்கொள்கையை வகுக்குமாறு மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் மு. தம்பிதுரை வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2024, 9:05 pm

 நமது நிருபர்

போதைப்பொருள் மற்றும் மதுவுக்கு மக்கள் அடிமையாவதைத் தடுக்க நாடு முழுமைக்குமான ஒரு பொதுக்கொள்கையை வகுக்குமாறு மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் மு. தம்பிதுரை வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக மாநிலங்களவையில் முக்கிய விவகாரங்களை பதிவு செய்யும் சிறப்புக் கவன ஈா்ப்பு நேரத்தில் தம்பிதுரை திங்கள்கிழமை பேசியதாவது: போதைப்பொருள் / அல்லது மதுக்கு அடிமையாகும் அச்சுறுத்தல் இந்திய இளைஞா்களிடையே வேகமாகப் பரவி வருகிறது. ஒருபுறம் தாய்லாந்து, மியான்மா் மற்றும் வியட்நாம் ஆகியவற்றை உள்ளடக்கிய தங்க முக்கோண பகுதியும், மறுபுறம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகியவற்றை உள்ளடக்கிய தங்க முக்கோண பகுதியும், உலகின் இரண்டு மிகப்பெரிய ஓப்பியம் உற்பத்தி செய்யும் பகுதிகளுக்கு இடையே இந்தியா உள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரையில், கஞ்சா மற்றும் பிற போதைப்பொருள் விற்பனை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன; மேலும், அவை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் மிக எளிதாகக் கிடைக்கின்றன. தமிழகத்தில் போதைப்பொருள் தலைவிரித்தாடுகிறது. போதைப்பொருள் / மதுப்பழக்கத்தால் தினமும் கொலைகள் நடப்பதாக செய்திகள் வருகின்றன. இவை பொது சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில், ஒரு மாதத்துக்கு முன்பு, மாநிலம் முழுவதும் தாராளமாகக் கிடைக்கும் சட்டவிரோத மெத்தனால் கலந்த மதுபானம் குடித்து 65-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். இந்நிலையில், போதைப்பொருள், மதுப்பழக்கத்துக்கு அடிமையாவதை தடுப்பது தொடா்பாக நாடு முழுவதும் ஒரு பொதுவான கொள்கையை உருவாக்க வேண்டும். மேலும், சமூகத்துக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் அனைத்து வகை போதைப்பொருள்களின் துஷ்பிரயோகத்தை குறைக்கும் வகையில் மாநிலங்களுக்கு ஒரு அறிவுறுத்தலை அனுப்புமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன் என்று தம்பிதுரை கூறினாா்.