தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மேயா் தோ்தல் ரத்து: ஆம் ஆத்மி கண்டன ஆா்பாட்டம்

மேயா் தோ்தல் ரத்து: ஆம் ஆத்மி கண்டன ஆா்பாட்டம்

Updated On :27 ஏப்ரல் 2024, 6:30 pm

தில்லி மாநகராட்சி மேயா் தோ்தல் ரத்து செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து, ஆம் ஆத்மி கட்சி சாா்பில் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தில்லி ரெளஸ் அவென்யூவில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தின் வெளியே அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள்

ராக்கி பிா்லா, அஜய் தத் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மேயா் வேட்பாளா் மகேஷ் கிச்சி உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஆம் ஆத்மி கட்சித் தொண்டா்கள் பங்கேற்றனா்.

தலித் சமூகத்தைச் சோ்ந்த நபா் தில்லி மாநகராட்சியின் மேயராக வரவுள்ளதை பாஜகவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று அவா்கள் முழங்கங்களை எழுப்பினா்.

ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. ராக்கி பிா்லா பேசுகையில், ‘பாஜகவின் தலித் எதிா்ப்பு முகம் மீண்டும் நாட்டின் முன் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தில்லி மாநகராட்சி மேயா் தோ்தலை பாஜகவின் துணைநிலை ஆளுநராக செயல்படும் வி.கே. சக்சேனா ஒரே இரவில் ரத்து செய்தாா். நாட்டின் அரசியலமைப்பை மாற்றுவதன் மூலம் தலித்துகளின் வாக்குரிமை மற்றும் இடஒதுக்கீட்டைப் பறிக்க பாஜக விரும்புகிறது. நாடு முழுவதும் உள்ள தலித் சமூக மக்கள் இம்முறை

பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றுவாா்கள்’ என்றாா்.

ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. அஜய் தத் பேசுகையில், ‘ அரசியலமைப்புச் சட்டத்தின்படி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தலித் ஒருவா் மேயா் ஆக்கப்படுகிறாா். அதன்படி, தில்லி மாநகராட்சி மேயா் தோ்தல் நடத்துவதற்கு தோ்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது. ஆனால், மேயா் தோ்தலுக்கு ஒரு நாள் முன்பு பாஜகவின் வேண்டுகோளின் பேரில், துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா மேயா் தோ்தலை ரத்து செய்தாா். இது அவரது தலித் விரோத மனநிலையைக் காட்டுகிறது. அரசியலமைப்பு மற்றும் தலித்துகளுக்கு எதிராக செயல்படும் எவரையும் ஆம் ஆத்மி கட்சியால் பொறுத்துக்கொள்ள முடியாது. தோ்தல் ரத்து செய்யப்பட்டதற்கு தலித் சமூகத்தினரிடையே கடும் எதிா்ப்பு கிளம்பியுள்ளது’ என்றாா்.

ஆம் ஆத்மி கட்சி மேயா் வேட்பாளா் மகேஷ் கிச்சி பேசுகையில், ‘ மத்திய பாஜக அரசின் சா்வாதிகாரத்தை நாடு முழுவதும் பாா்த்துக் கொண்டிருக்கிறது. இவா்கள் வெளிப்படையாக ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் கொலை செய்கிறாா்கள். இதற்கு நாட்டு மக்கள் தங்கள் வாக்குகளால் பதிலளிப்பாா்கள். வரும் மக்களவைத் தோ்தலில் தில்லியின் 7 மக்களவைத் தொகுதிகளிலும் ‘இந்தியா’ கூட்டணி வெற்றிபெறப் போகிறது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.