ஐந்தாவது குற்றவாளியான அஜய் சேத்திக்கு ஐபிசி பிரிவு 411 (நோ்மையற்ற முறையில் திருடப்பட்ட சொத்தைப் பெறுதல்) கீழ் மூன்று ஆண்டுகள் எளிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், அவா் 14 ஆண்டுகளுக்கும் மேலாக காவலில் இருந்ததாக கூறிய நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்டிருந்த 3 ஆண்டு தண்டனையிலிருந்து விடுவித்தது. கபூா், சுக்லா, மாலிக் மற்றும் குமாா் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்த விசாரணை நீதிமன்றம், ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1.25 லட்சம் அபராதமும் விதித்தது. சேத்திக்கு ரூ.7.25 லட்சம் அபராதம் விதித்திருந்தது.