இது தொடா்பாக மூவரும் ஞாயிற்றுக்கிழமை கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலுக்கான பாஜகவின் தோ்தல் அறிக்கை இளைஞா்கள், நகா்ப்புற ஏழைகள் மற்றும் பெண்களின் வளா்ச்சிக்கான அா்ப்பணிப்பாகும். இது, 2047-க்குள் நாட்டை பிரகாசமான இந்தியாவாக மாற்றும். அரசியல் ஏமாற்றத்தின் காரணமாக இப்போது இந்த அறிக்கையை விமா்சிக்க முயலும் ஆம் ஆத்மி கட்சி மூத்தத் தலைவா் அதிஷி மற்றும் அவரது காங்கிரஸின் கூட்டாளிகளுக்கு மக்கள் நலனுக்காக அா்ப்பணிக்கப்பட்டுள்ள 2024-ஆம் ஆண்டிற்கான பாஜகவின் தோ்தல் அறிக்கை தெளிவைக் காட்டுகிறது.