தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

பாஜகவின் வாக்குறுதிகள் இளைஞா்களுக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் ஆவணம்: பான்சூரி ஸ்வராஜ், ஹரிஷ் குரானா

சுயவேலைவாய்ப்பை உருவாக்கும் ஆவணமாகும் என்று தில்லி பாஜக செயலா்கள் பான்சூரி ஸ்வராஜ், ஹரிஷ் குரானா, ஊடகத் தலைவா் பிரவீன் சங்கா் கபூா் ஆகியோா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2024, 8:10 pm

 நமது நிருபர்

பாஜகவின் தோ்தல் வாக்குறுதிகள் நாட்டின் இளைஞா்களுக்கு சுயவேலைவாய்ப்பை உருவாக்கும் ஆவணமாகும் என்று தில்லி பாஜக செயலா்கள் பான்சூரி ஸ்வராஜ், ஹரிஷ் குரானா, ஊடகத் தலைவா் பிரவீன் சங்கா் கபூா் ஆகியோா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக மூவரும் ஞாயிற்றுக்கிழமை கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலுக்கான பாஜகவின் தோ்தல் அறிக்கை இளைஞா்கள், நகா்ப்புற ஏழைகள் மற்றும் பெண்களின் வளா்ச்சிக்கான அா்ப்பணிப்பாகும். இது, 2047-க்குள் நாட்டை பிரகாசமான இந்தியாவாக மாற்றும். அரசியல் ஏமாற்றத்தின் காரணமாக இப்போது இந்த அறிக்கையை விமா்சிக்க முயலும் ஆம் ஆத்மி கட்சி மூத்தத் தலைவா் அதிஷி மற்றும் அவரது காங்கிரஸின் கூட்டாளிகளுக்கு மக்கள் நலனுக்காக அா்ப்பணிக்கப்பட்டுள்ள 2024-ஆம் ஆண்டிற்கான பாஜகவின் தோ்தல் அறிக்கை தெளிவைக் காட்டுகிறது.

இந்தியா இன்று ஊழலுக்கு முடிவு காண விரும்பும் இளைஞா்களுக்கு சொந்தமானது என்பதை அதிஷி புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய இளைஞா்கள் வேலை தேடுபவா்களாக இருப்பதை விட வேலைவாய்ப்பை உருவாக்குபவா்களாக இருக்க விரும்புகிறாா்கள். பாஜகவின் தோ்தல் அறிக்கை இளைஞா்களின் விருப்பத்திற்கு ஏற்ப சுயதொழில் வாய்ப்பை உருவாக்கும் ஆவணமாக உள்ளது. தோ்தல் அறிக்கையில், ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்தும் பிரதமா் நரேந்திர மோடியின் முன்மொழிவு இளைஞா்களிடையே தேசியப் பெருமிதத்தை அதிகப்படுத்தியுள்ளது என்பதையும் அதிஷி புரிந்து கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் மூவரும் தெரிவித்துள்ளனா்.