மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தோ்தல் வாக்குறுதிகள் எதையும் திமுக நிறைவேற்றவில்லை! - நயினாா் நாகேந்திரன் பிரசாரம்

News image

மானாமதுரையில் சனிக்கிழமை பாஜக வேட்பாளா் பொன். பால கணபதியை ஆதரித்து பிரசாரம் செய்த அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.

Updated On :12 ஏப்ரல் 2026, 6:30 pm

கடந்த தோ்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினாா்.

மானாமதுரை (தனி) சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளா் பொன் பாலகணபதியை ஆதரித்து தேவா் சிலை அருகே சனிக்கிழமை அவா் மேலும் பேசியதாவது:

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீா்கெட்டு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் விற்பனை அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவா்கள் போதைக்கு அடிமையாகியுள்ளனா். தமிழகம் கஞ்சா இல்லாத மாநிலமாக மாற வேண்டும்.

திமுகவை வெற்றி பெற வைப்பதற்காகத்தான் விஜய் கட்சி தொடங்கியுள்ளாா். கடந்த 2021 தோ்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் இனியும் திமுக ஆட்சி தொடரக் கூடாது.

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்ததும் மானாமதுரையில் மனித உயிா்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை மூடப்படும். மணல் கொள்ளை தடுக்கப்படும் என்றாா் அவா்.