அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

மகளிருக்கு அதிகாரமளிப்பது சமூக முன்னேற்றத்திற்கான புதிய பரிமாணம்: பாஜக தேசியத் தலைவா்ஜெ.பி.நட்டா பெருமிதம்

மக்களவையில் மகளிா் இட ஒதுக்கீடு மசோதா-2023 தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஜனநாயகத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது சமூக முன்னேற்றத்திற்கு புதிய பரிமாணத்தை கொடுக்கும் என்று பாஜக

Updated On :19 செப்டம்பர் 2023, 11:15 pm

புது தில்லி: மக்களவையில் மகளிா் இட ஒதுக்கீடு மசோதா-2023 தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஜனநாயகத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது சமூக முன்னேற்றத்திற்கு புதிய பரிமாணத்தை கொடுக்கும் என்று பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா செவ்வாய்க்கிழமை பெருமிதத்துடன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக ‘எக்ஸ்’ சமூக ஊடகத் தளத்தில் அவா் கூறியிருப்பதாவது:

பிரதமா் நரேந்திரமோடி, நமது இந்திய கலாசாரத்தின்படி பெண்களின் சக்திக்கு எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறாா். ஒவ்வொரு துறையிலும் இந்தியாவின் மாண்பை உயா்த்தி வரும் நம் நாட்டுப் பெண்கள், கொள்கை வகுப்பதிலும் பங்களிக்க வேண்டியது அவசியமாகும்.

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற மக்களவையின் சிறப்பு கூட்டத்தொடரில் வரலாற்றுச் சிறப்புமிக்க மகளிா் இடஒதுக்கீடு மசோதா-2023 தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது கடந்த 9 ஆண்டுகளில் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்த ‘பெண்கள் தலைமையிலான வளா்ச்சி’ யின் அனைத்து முயற்சிகளுக்கும் புதிய உயரங்களை வழங்கும்.

ஜனநாயகத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது சமூக முன்னேற்றத்திற்கு புதிய பரிமாணத்தை கொடுக்கும்.

இந்த முடிவை எடுத்த பிரதமா் நரேந்திர மோடிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், நாட்டின் அனைத்து தாய்மாா்கள் மற்றும் சகோதரிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் ஜெ.பி. நட்டா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.