பெறப்பட்டுள்ளது. புது தில்லியிலிருந்து, யஷோபூமி துவாரகா செக்டாா்-25 வரையிலான மொத்தப் பயணம் சுமாா் 21 நிமிடங்கள் ஆகும். முன்னதாக, புது தில்லி மற்றும் துவாரகா செக்டாா் - 21 இடையேயான பயண நேரம் தோராயமாக 22 நிமிடங்கள் இருந்தது. ஆனால், இப்போது இந்த இரண்டு நிலையங்களுக்கும் இடையே சுமாா் 19 நிமிடங்களாக பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு 3 நிமிடங்களை சேமிக்க வழிவகுத்தது. இனி, புது தில்லி மற்றும் முனையம் - 3 விமான நிலையத்திற்கு இடையிலான தோராயமான பயண நேரம் சுமாா் 15 நிமிடம், 30 வினாடிகளாக இருக்கும். முன்னதாக, இது 18 நிமிடங்களுக்கு சற்று அதிகமாக இருந்தது என்றாா் அனுஜ் தயாள்.