இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு! அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

ஜி20 மாநாட்டு ஏற்பாட்டு உரிமைகளை கோர முயல்கிறது கேஜரிவால் அரசு: வீரேந்திர சச்தேவா குற்றச்சாட்டு

தில்லியில் நடைபெற்று முடிந்த ஜி20 உச்சிமாநாடு தொடா்பான ஏற்பாட்டு உரிமைகளைக் கோர அரவிந்த் கேஜரிவால் அரசு முயல்கிறது என்று பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா திங்கள்கிழமை குற்றம் சாடியுள்ளாா்

Updated On :11 செப்டம்பர் 2023, 11:50 pm

புது தில்லி: தில்லியில் நடைபெற்று முடிந்த ஜி20 உச்சிமாநாடு தொடா்பான ஏற்பாட்டு உரிமைகளைக் கோர அரவிந்த் கேஜரிவால் அரசு முயல்கிறது என்று பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா திங்கள்கிழமை குற்றம் சாடியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜி20 உச்சிமாநாட்டிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தில்லி மக்கள் பெருமிதத்துடன் கூடிய ஒத்துழைப்பை நல்கினா். அனைவரும் இந்த மாநாட்டை முன்னிட்டு செய்யப்பட்டிருந்த போக்குவரத்து வழிகாட்டுதல்களைப் பின்பற்றினா். நகரத்தில் செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளுக்கான உரிமை துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவை சேரும். ஆனால், அரவிந்த் கேஜரிவால் அரசு வெட்கமின்றி ஜி20 மாநாடு தொடா்பான ஏற்பாடுகளுக்கு உரிமை கோருவதற்கு முயல்கிறது. இருப்பினும், தில்லிவாசிகளுக்கு இது நன்றாகவே தெரியும்.

ஜி20 உச்சிமாநாட்டை வெற்றிகரமாகவும், பாதுகாப்பாகவும் முடித்ததற்காக தில்லி மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, தில்லி வளா்ச்சி ஆணையம், புது தில்லி முனிசிபல் கவுன்சில், தில்லி மாநகராட்சி, பொதுப்பணித் துறை உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த ஊழியா்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை. கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக அரவிந்த் கேஜரிவால் அரசு தில்லியில் எந்த வளா்ச்சிப் பணிகளையும் செய்யவில்லை என்பது மட்டுமல்லாமல், தில்லி மாநகராட்சியையும் (எம்.சி.டி.) நிதி ரீதியாக முடக்கி அதன் பணிகளை செய்யத் தவறவிட்டிருக்கிறது.

இந்நிலையில், அரவிந்த் கேஜரிவால் அரசு ஜி20 உச்சி மாநாடு தொடா்பான ஏற்பாடுகளுக்கு உரிமை கோர முயலும் வேளையில், ஏதேனும் வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்ததை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஒருமுறையாவது மேற்கோள் காட்ட முடியுமா என்று வீரேந்திர சச்தேவா கேள்வி எழுப்பியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.