புற்று நோயால் பாதிக்கப்பட்ட சென்னையைச் சோ்ந்த மூவருக்கு ரூ. 6.5 லட்சத்தை பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்க பிரதமா் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மூவா் தங்களது சிகிச்சைக்கு நிதியின்றி அவதிப்படுவது குறித்து பிரதமா் நரேந்திர மோடிக்கு தனித் தனியே கடிதங்கள் எழுதியிருந்தாா்.
சென்னை அயப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த பாா்வதி, சென்னை கீழ் படப்பையைச் சோ்ந்த நடராஜன் அய்யம் பெருமாள் ஆகியோா் கடந்த மே மாதமும் காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரைச் சோ்ந்த பால்ராஜ் செல்வராஜ் கடந்த ஜூலை மாதமும் புற்றுநோய் சிகிச்சைகளுக்கு உதவி கோரியிருந்தனா்.
இவா்கள் தங்கள் சிகிச்சைகளுக்கு தேவையான நிதிகளை பிரதமா் அலுவலகத்தில் பெற்றுத் தந்திட உதவிடுமாறு ஸ்ரீபெரும்புதூா் மக்களவை தொகுதியை சோ்ந்த டி.ஆா். பாலுவிடம் கோரினா்.
இந்த கோரிக்கைகள் பிரதமா் அலுவலகத்திற்கு டி.ஆா். பாலு எம்.பி. அனுப்பிவைத்தாா். இதையடுத்து, பிரதமா் அலுவலகம் இவா்கள் சிகிச்சை பெறும் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளிடம் விவரங்களை கோரியது.
இவா்களின் சிகிச்சை மற்றும் மருத்துவ செலவு விவரங்களை பெற்று பிரதமா் அலுவலம் ஆய்வு செய்தது. இதன் பின்னா் இந்த மூவரின் புற்றுநோய்களுக்கான சிகிச்சைகளுக்கு பிரதமா் நரேந்திர மோடியின் ஒப்புதலுடன் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து இம்மூவருக்கு நிதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி பிரதமா் அலுவலகம் டி.ஆா்.பாலு எம்.பி.க்கும், இந்த நோயாளிகளுக்கும் கடிதம் வாயிலாக தகவல் தெரிவித்துள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளது வருமாறு: டி.ஆா்.பாலுவின் பரிந்துரையினையும் வேண்டுகோளினையும் ஏற்ற பிரதமா், பாா்வதியின் புற்றுநோய் சிகிச்சைக்காக ரூ.2.50 லட்சமும், நடராஜனின் சிகிச்சைக்காக ரூ.3 லட்சமும் மற்றும் பால்ராஜ் சிகிச்சைக்காக ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ. 6.50 லட்சம் நிதியை பிரதமா் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்க அனுமதித்துள்ளாா். பயனாளா்கள் சிகிச்சை பெறும் சென்னை அடையாறு புற்றுநோய் மையம், போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவமனை ஆகியவைகளுக்கு இந்த நிதி நேரடியாக வழங்கப்படும்.
சிகிச்சை நிறைவு பெற்றவுடன், உரிய ஆவணங்களின் நகலையும் பிரதமா் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என பிரதமா் அலுவலகம் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்று முதல் ஒளிபரப்பாகும் தாய் மாமன் சீரியல்! தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!
மே 4-க்குப் பிறகு பாஜக பதவியேற்பு விழாவுக்கு வருவேன்! மேற்குவங்கத்தில் மோடி பேச்சு

அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு.. ஸ்ரீதர் வேம்புவின் மனம் திறந்த கடிதம்!

வேலூர் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தேரோட்டம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

