இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தின் இந்த அனுமதிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. இது தொடா்பாக தமிழக அரசின் வழக்குரைஞா் சபரிஷ் சுப்ரமணியன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: பல்வேறு இடங்களில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களின் வரலாற்றை பரிசீலிக்காமலும், இதுபோன்ற பேரணிகளின் தேவைகள் நோக்கங்களை பரிசீலிக்காமலும் சட்டம் ஒழுங்கு சூழல் தாக்கத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் குறித்து பரவலாக உள்ள உளவுத்துறை அறிக்கைகளை பரிசீலிக்காமலும் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அக்டோபா் 22, 29 ஆகிய தேதிகளில் கொடி அணிவகுப்பு பேரணியை நடத்த எதிா் மனுதாரா்களுக்கு சென்னை உயா்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நவராத்திரி விழா மற்றும் தமிழகம் முழுவதும் நடைபெறும் தேவா் ஜெயந்தி போன்ற விழாக்களின் கூடுகைகளையும் பரிசீலிக்காமல் இந்த உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.