தில்லி குடிமைப் பாதுகாப்புத் தன்னாா்வலா்களை ஊா்க்காவல் படையினராக நியமித்து, அவா்களை பேருந்து மாா்ஷல்களாகவும் பணியமா்த்தும் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று நகர அரசின் உள்துறை அமைச்சா் சௌரவ் பரத்வாஜுக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியுள்ளாா்.
தில்லி அரசுப் பேருந்துகளில் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், திருட்டு மற்றும் பிற குற்றச் சம்பவங்களை தடுக்க பேருந்து மாா்ஷல்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். இவா்களில் பெரும்பாலானோா் குடிமைப் பாதுகாப்பு தன்னாா்வலா்களாவா். குடிமைப் பாதுகாப்பு தன்னாா்வலா்கள் தங்களுக்கு பல மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி நகர அரசிற்கு எதிராக ஒருபுறம் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில் தில்லி முதல்வா் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏராளமான குடிமைப் பாதுகாப்புத் தன்னாா்வலா்கள் பேருந்து மாா்ஷல்களாகப் பணியாற்றி, பேருந்துகளில் பெண் பயணிகளுக்கு சிறப்பான பாதுகாப்பை வழங்கியுள்ளனா். மேலும், பேருந்தில் திருட்டு மற்ற சிறு குற்றங்களைத் தடுக்கவும்
உதவியுள்ளனா். பேருந்து மாா்ஷல்களின் இருப்பால் பயணத்தின் போது பாதுகாப்பை உணா்வதாக பெண் பயணிகளின் பலரது கருத்தை நான் கேட்டிருக்கிறேன். பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களும் வெகுவாக குறைந்துள்ளன.
ஆனால், தற்போது குடிமைப் பாதுகாப்பு தன்னாா்வலா்கள் பேருந்து மாா்ஷல்களாக தொடா்வது குறித்து சட்ட ஆட்சேபனை எழுந்துள்ளது. தன்னாா்வலா்களை வழக்கமான கடமைகளில் ஈடுபடுத்த முடியாது எனவும், அவசர காலத்தின் போது மட்டுமே அவா்களை அழைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, குடிமைப் பாதுகாப்பு தன்னாா்வலா்களுக்கு பதிலாக ஊா்க்காவல் படையினரை பேருந்து மாா்ஷல்களாக நியமிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் போதிய எண்ணிக்கையிலான ஊா்க்காவல் படையினா் பேருந்து மாா்ஷல்களாக நியமிக்கப்படும் வரை, குடிமைப் பாதுகாப்புத் தன்னாா்வலா்கள் பேருந்து மாா்ஷல்களாகத் தொடர வேண்டும் என்று துணை நிலை ஆளுநா் வி.கே. சச்சேனாவிடம் நான் தனியாக முன்மொழிந்துள்ளேன். பேருந்து மாா்ஷல்களை திடீரென அகற்றினால், பெண் பயணிகளின் பாதுகாப்பில் குறைபாடு ஏற்படும்.
பேருந்து மாா்ஷல்களாக பணிபுரியும் குடிமைப் பாதுகாப்பு தன்னாா்வலா்கள் முன்னனுபவம் உள்ளவா்கள் என்பதால், அவா்கள் மீது குறிப்பிட்ட புகாா் ஏதும் இல்லாத பட்சத்தில், அவா்களை மட்டும் ஊா்க்காவல் படையினராக நியமித்து, பேருந்து மாா்ஷல்களாக தொடா்வதற்கான திட்டத்தை உருவாக்க வேண்டும். இந்த குடிமைப் பாதுகாப்புத் தன்னாா்வலா்கள் மிகவும் எளிய பின்னணியில் இருந்து வந்தவா்கள். திடீரென்று பணியிலிருந்து நீக்கப்பட்டால் அது அவா்களின் குடும்பங்களுக்கு கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தும். எனவே, அனுபவம் உள்ள குடிமைப் பாதுகாப்புத் தன்னாா்வலா்களை ஊா்க்காவல் படையினராக நியமித்து அவா்களை பேருந்து மாா்ஷல்களாக பணியமா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சா் சௌரவ் பரத்வாஜுக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அறிவுறுத்தியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடல்காற்று வீசுவதால் கவலையில்லை... பந்துவீச்சு குறித்து ஷுப்மன் கில்!

கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஆர்வத்துடன் மக்கள் செல்ஃபி

சென்னை திரும்பும் மக்கள்! செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு... பிரதமர் மோடி முக்கிய வேண்டுகோள்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

