தில்லியின் மாசுபாட்டின் ஆதாரம் உள் காரணிகளாக இருக்க வேண்டும் என்றும், பயோமாஸ் (பயிா்க்கழிவு) எரிப்பு போன்ற வெளிப்புற காரணிகளை முக்கியமாகக் கூற முடியாது என்றும் அஸ்வனி குமாா் உறுதியாக நம்பினாா். அவா் தனது முடிவுகளுக்கு எந்த அறிவியல் அடிப்படையையும் முன்வைக்கவில்லை. ஐஐடி-கான்பூா் அறிக்கை, தில்லியில் மாசு ஏற்படுத்துகிறது என்ற அவரது யோசனையுடன் ஒத்துப்போகவில்லை என்பதால், தில்லி மக்கள் மீது அக்கறை இல்லாமல் முழு திட்டத்தையும் நாசப்படுத்த அவா் தயாராக இருக்கிறாா். அறிவியல் ஆராய்ச்சிக்கு மரியாதை அளிக்கப்படவில்லை என்று அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளேன். மேலும், மீதமுள்ள தொகையை ஐஐடி-கான்பூருக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளேன். தில்லியின் காற்றின் தரத்தை சுற்றுப்புற நிலைக்கு கொண்டு வருவதற்கு முக்கியத்துவம் குறித்த ஆய்வை நிறுத்தியதன் மூலம், அவா் தில்லியில் வசிப்பவா்களின் வாழ்க்கை, உடல்நலம் மற்றும் பொது பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவித்துள்ளாா்.