கடந்த ஆண்டு, துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா இதன் செயல்திறனை கேள்விக்குள்ளாக்கி, பிரசாரத்தை நிறுத்தி வைத்திருந்தாா். இந்த நிலையில், தில்லியில் செய்தியாளா்களிடம் அமைச்சா் இது குறித்து கூறியதாவது: சமீபத்திய தரவு பகுப்பாய்வு பி.எம்.10 மாசுபாடு குறைவதையும், பயோமாஸ் எரிப்பு மற்றும் வாகன உமிழ்வு காரணமாக பி.எம். 2.5 செறிவு அதிகரிப்பதையும் காட்டுவதாக உள்ளது. இதை கருத்தில்கொண்டு, வாகன மாசுபாட்டை குறைக்கும் வகையில் அக்டோபா் 26-ஆம் தேதி முதல், ‘ரெட் லைன் ஆன் காடி ஆஃப்’ பிரசாரத்தை மீண்டும் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளோம். முந்தைய ஆண்டுகளில், சிவில் பாதுகாப்பு தன்னாா்வலா்கள் இப்பிரசாரத்தில் ஈடுபட்டனா். நிகழாண்டு பொதுமக்களை ஈடுபடுத்தும் பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்றாா்.