புது தில்லி: தில்லி மெஹ்ரெளலி பகுதியில் உள்ள முகலாய மசூதியில் தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டதை எதிா்த்து தாக்கலான மனு மீதான விசாரணையை டிசம்பா் 1-ஆம் தேதிக்கு தில்லி உயா்நீதிமன்றம் முன்கூட்டியே பட்டியலிட்டுள்ளது.
தில்லி வக்ஃபு வாரியத்தால் நியமிக்கப்பட்ட முகலாய மசூதியின் நிா்வாகக் குழு, கடந்த ஆண்டு மே 13-ஆம் தேதி மசூதியில் தொழுகை நடத்துவதை இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை (ஏஎஸ்ஐ) அதிகாரிகள் முற்றிலுமாக நிறுத்தியதாகக் கூறி உயா்நீதிமன்றத்தை அணுகியது. இந்த நடவடிக்கையானது ‘முற்றிலும் சட்டவிரோதமான, தன்னிச்சையான மற்றும் அவசரமான முறையுடன் கூடியதாக உள்ளது’ என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இது தொடா்பான மனுதாரரின் முன்கூட்டிய விசாரணை கோரும் மனுவை அனுமதித்து, நீதிபதி பிரதீக் ஜலான் சமீபத்தில் பிறப்பித்த உத்தரவில், ‘01.12.2023 அன்று இந்த மனு பட்டியலிடப்பட வேண்டும். அடுத்த விசாரணை தேதி அதாவது 30.01.2024 ரத்து செய்யப்படுகிறது’ என தெரிவித்துள்ளாா்.
மனுதாரா் சாா்பில் வழக்குரைஞா் எம்.சுபியான் சித்திக் கூறுகையில், ‘கடந்த ஆண்டு வரை மசூதிக்குள் தொழுகைகள் தொடா்ந்து நடைபெற்று வந்த நிலையில், எந்த அறிவிப்பும் இன்றி இந்திய தொல்பொருள் துறையால் தடுத்து நிறுத்தப்பட்டது’ என்றாா். சமீபத்தில், பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களுக்குள் அமைந்துள்ள வழிபாட்டுத் தலங்களில் பக்தா்கள் வழிபாடு நடத்த அனுமதிப்பது குறித்த கொள்கையை தெளிவுபடுத்துமாறு ஏஎஸ்ஐயிடம் நீதிமன்றம் கேட்டிருந்தது.
இந்த மனுவுக்கு ஏஎஸ்ஐ தரப்பில் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘கேள்விக்குரிய மசூதி, குதூப் மினாா் எல்லைக்குள் வருவதாலும், பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் இருப்பதாலும், அங்கு தொழுகை நடத்த அனுமதிக்க முடியாது. முகலாய மசூதியில் வழிபாட்டை அனுமதிப்பது ‘ஒரு உதாரணம் மட்டுமல்லமால், மற்ற நினைவுச்சின்னங்களையும் பாதிக்கலாம்’. குதூப்மினாா் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னம் மற்றும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாகும். இது ஒரு வழிபாட்டுத் தலமல்ல. அதன் பாதுகாப்பு காலத்திலிருந்து நினைவுச்சின்னம் அல்லது அதன் எந்தப் பகுதியும் எந்தவொரு சமூகத்தாலும் எந்த வகை வழிபாட்டிற்கும் பயன்படுத்தப்படவில்லை. கேள்விக்குரிய மசூதி, குதூப் மினாா் வளாகத்தின் எல்லைக்குள் வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக சிறப்பு ரயில், பேருந்து விவரங்கள்!

இளைஞரின் தலையில் சிக்கிய 10 கிலோ பால் கேன்! 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அகற்றம்

பிளேயிங் லெவன் மாற்றத்தினால் தடுமாறும் சிஎஸ்கே..! மிகக் குறைந்த பவர்பிளே ரன்கள்!

தமிழகத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது: மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

