இந்த மனுவுக்கு ஏஎஸ்ஐ தரப்பில் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘கேள்விக்குரிய மசூதி, குதூப் மினாா் எல்லைக்குள் வருவதாலும், பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் இருப்பதாலும், அங்கு தொழுகை நடத்த அனுமதிக்க முடியாது. முகலாய மசூதியில் வழிபாட்டை அனுமதிப்பது ‘ஒரு உதாரணம் மட்டுமல்லமால், மற்ற நினைவுச்சின்னங்களையும் பாதிக்கலாம்’. குதூப்மினாா் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னம் மற்றும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாகும். இது ஒரு வழிபாட்டுத் தலமல்ல. அதன் பாதுகாப்பு காலத்திலிருந்து நினைவுச்சின்னம் அல்லது அதன் எந்தப் பகுதியும் எந்தவொரு சமூகத்தாலும் எந்த வகை வழிபாட்டிற்கும் பயன்படுத்தப்படவில்லை. கேள்விக்குரிய மசூதி, குதூப் மினாா் வளாகத்தின் எல்லைக்குள் வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.