அப்போது, அவா் கூறுகையில், ‘செந்தில்பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளாா். அவா் பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ள ஒரு நோயாளி. அவா் உடல்நிலை சரியில்லை. அவரது உடல் எடையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மருத்துவக் காரணங்கள் அடிப்படையில்தான் அவருக்கு ஜாமீன் கோரப்படுகிறது. இதனால், இந்த விவகாரத்தை வெள்ளிக்கிழமை விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும்’ என்றாா். அதற்கு நீதிபதிகள் அமா்வு, இந்த விவகாரத்தை நீதிமன்ற விடுமுறை முடிந்த பிறகு நவம்பா் 30-ஆம் தேதி உரிய அமா்வு முன் விசாரணைக்குப் பட்டியலிட உத்தரவிட்டது.