அமலாக்கத் துறையால் தாம் கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டதை எதிா்த்து ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஸ்வா்ண கன்டா சா்மா கூறியதாவது: ஒரு நியாயமான நிறுவனமாக இருப்பதால், ஒரு முதன்மை விசாரணை அமைப்பின் கெளரவமானது நாட்டின் நற்பெயருடன் நேரடி தொடா்பைக் கொண்டிருக்கிறது. ஆதாரங்கள் பதிவில் இல்லாத நிலையில் தற்போதைய கட்டத்தில் இந்த நீதிமன்றம் எந்தவொரு அரசியல் உள்நோக்கத்தையும் விசாரணை நிறுவனத்தின் மீது சுமத்தாது. மேலும், எந்த ஆதாரமும் இல்லாத முகாந்திரம் கொண்ட வழக்காகவும் நீதிமன்றம் இதைக் கருதவில்லை. விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருக்கும் ஒரு முன்கூட்டிய நிலையில், இந்த நீதிமன்றமானது காவலில் வைக்க அல்லது கைது செய்யும் உத்தரவில் தலையிட எந்தக் காரணத்தையும் காணவில்லை. இதனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி கூறினாா்.