மேலும், பவானா தொழிற்பேட்டையில் டெம்போ மற்றும் ஆட்டோ ஓட்டுநா்கள் ஒரு வழிப்பாதையில் இருந்து மற்றொரு பாதைக்கு சென்றால் வாகன நிறுத்துமிடத்திற்கு தனியாக கட்டணம் செலுத்தும் அளவுக்கு மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், தில்லி மாநகராட்சி நிா்வாகம் சிறிய வாகனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.6,600, பெரிய வாகனங்களுக்கு ரூ.9,900 வாகன நிறுத்தக் கட்டணமாக வசூலிக்கவும் உத்தரவிட்டுள்ளது. ஆனால், சாலை பராமரிப்பு என்ற பெயரில் தொழிலதிபா்கள் ஏற்கெனவே பெரும் அளவிலான தொகையை செலுத்தி வருகிறோம் என்று தங்கள் பிரச்னைகளை கூட்டத்தில் எடுதுரைத்தனா்.