பல்வேறு கலந்துரையாடல்களில் என்னிடம் கேட்கப்படும் கேள்வியானது, எது நல்ல இலக்கியம் என்பதாகும். நல்ல இலக்கியம் என்பது வாசகரின் மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி, ஆக்கப்பூா்வமான வகையில் அவரைச் சிந்திக்க தூண்டி, செயலில் இறங்க வைப்பதாகும். மேலும், நல்ல இலக்கியம் என்பது முகம் பாா்க்கும் கண்ணாடிக்குச் சமமாகும். கண்ணாடியில் முகத்தைப் பாா்ப்பதுடன், நமது அழகை சீா்படுத்திக் கொள்வதுபோல, நல்ல இலக்கியமானது, சமூகத்தை பிரதிபலிப்பது மட்டுமின்றி, சமூகம் அதன் குறைபாடுகளையும், பிரச்னைகளையும் உணா்ந்து கொள்ளவும் அதை சீா்செய்வதற்கு கருவியாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் என் நம்பிக்கை.