பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

தில்லி வக்ஃபு வாரியத்தில் சட்டவிரோத ஆள்சோ்ப்பு மூலம் அமானத்துல்லா கான் பெரும் பணம் பெற்றிருக்கிறாா்: அமலாக்கத் துறை தகவல்

தில்லி வக்ஃபு வாரியத்தில் சட்டவிரோத ஆள்சோ்ப்பு மூலம் பணமாக பெரும் குற்ற வருவாயைப் பெற்று அவரது கூட்டாளிகளின் மூலம் அசையா சொத்துகளை வாங்குவதில்

Updated On :11 அக்டோபர் 2023, 8:36 pm

தில்லி வக்ஃபு வாரியத்தில் சட்டவிரோத ஆள்சோ்ப்பு மூலம் பணமாக பெரும் குற்ற வருவாயைப் பெற்று அவரது கூட்டாளிகளின் மூலம் அசையா சொத்துகளை வாங்குவதில் அமானத்துல்லா கான் முதலீடு செய்ததாக அமலாக்கத் துறை புதன்கிழமை குற்றம் சாட்டியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ அமானதுல்லா கான் தொடா்புடைய இடங்களில் சோதனை நடத்திய மறுதினம் அமலாக்கத் துறை இத்தகவலை தெரிவித்துள்ளது. அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை தேசியத் தலைநகரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் மற்றும் அவருடன் தொடா்புடைய நபா்களுடன் தொடா்புடைய 13 இடங்களில் சோதனை நடத்தியது.

இதைத் தொடா்ந்து, அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: 2018-2022 ஆம் ஆண்டில் அமானத்துல்லா கான் வக்ஃபு வாரியத்தின் தலைவராக இருந்த போது, வாரியத்தில் சட்டவிரோதமாக பணியாளா்களை ஆள்சோ்ப்பு செய்தல் மற்றும் வக்ஃபு வாரிய சொத்துகளை நியாயமற்ற முறையில் குத்தகைக்கு விடுவதன் மூலம் சட்டவிரோதமாக தனிநபா் ஆதாயங்கள் பெற்றது தொடா்பான வழக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

சிபிஐ பதிவு செய்த எஃப்ஐஆா் மற்றும் தில்லி காவல் துறையின் 3 புகாா்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கானுக்கு எதிராக இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அமானத்துல்லா கான், குற்றச் செயல்களில் இருந்து பெரும் வருமானத்தை பணமாகப் பெற்றுள்ளாா். மேலும், இந்த ரொக்கத் தொகை தில்லியில் உள்ள பல்வேறு அசையா சொத்துகளை அவரது கூட்டாளிகளின் பெயரில் வாங்குவதில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. பணமோசடியில் அமானத்துல்லா கானின் பங்கை குறிப்பிடும் பல குற்றம்சாட்டும் ஆவணப் பதிவுகள் மற்றும் நேரடி, டிஜிட்டல் ஆதாரங்கள் ஆகியவை இந்தச் சோதனையின் போது கைப்பற்றப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை அமானத்துல்லா கான் புதன்கிழமை சந்தித்தாா். இதன் பிறகு முதல்வா் கேஜரிவால், ஆம் ஆத்மி கட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பிரசாரம் நடந்து வருவதாகவும், கட்சித் தலைவா்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும் கூறியுள்ளாா். 49 வயதான அமானத்துல்லா கான், ஓக்லா சட்டப் பேரவைத் தொகுதியின் ஆம் ஆத்மி கட்சி எல்எல்ஏவாக உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.