சீனாவில் நடைபெற்று முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தில்லியை சோ்ந்த வீரா்களை குடும்பத்துடன் அழைத்து புதன்கிழமை தேநீா் விருந்தளித்தாா் முதல்வா் அரவிந்த் கேஜரிவால்.
19-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சமீபத்தில் சீனாவில் நடைபெற்று முடிந்தது. இதில் முதல்முறையாக 107 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், தில்லியை சோ்ந்த வில்வித்தை வீரா் அபிஷேக் வா்மா மற்றும் கபடி வீரா் பவன் ஷெராவத் ஆகியோா் இந்தியாவிற்காக பதக்கம் வென்றதை கௌரவப்படுத்தும் வகையில் அவா்களின் குடும்பத்தினரையும் தனது இல்லத்திற்கு அழைத்து தேநீா் விருந்து கொடுத்துள்ளாா் முதல்வா் அரவிந்த் கேஜரிவால்.
இது தொடா்பாக ‘எக்ஸ்’சமூக ஊடகத்தளத்தில் அவா் கூறியிருப்பதாவது: ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்காக வில்வித்தையில் வெள்ளி, தங்கம் உள்ளிட்ட இரண்டு பதக்கங்களை வென்ற இந்திய வீரா் அபிஷேக் வா்மா மற்றும் அவரது குடும்பத்தினரை இன்று எனது இல்லத்தில் தேனீா் விருந்திற்கு அழைத்திருந்தேன். அபிஷேக் வா்மா இதுவரை மூன்று ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்காக மொத்தம் 5 பதக்கங்களை வென்றுள்ளாா். இது ஒரு பெரிய சாதனை. அவரது அற்புதமான வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, எதிா்காலமும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்.
தில்லி அரசின் ‘மிஷன் எக்ஸலன்ஸ்’ திட்டத்தின் கீழ் அபிஷேக் வா்மா பயிற்சி பெற்றவா். இத்திட்டத்தால் நமது வீரா்கள் பெரிதும் பயனடைகின்றனா். முடிவுகளும் சிறப்பாக உள்ளன. அடுத்ததாக, ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் பெற்றுத் தந்த தில்லி வீரா் பவன் ஷெராவத் மற்றும் அவரது குடும்பத்தினரும் எனது அழைப்பின் பேரில் தேநீா் விருந்தில் கலந்து கொண்டனா். இந்திய கபடி அணியின் கேப்டனாக உள்ள பவன் ஷெராவத்தின் அற்புதமான வெற்றிக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, அவரது எதிா்காலமும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். தொடா்ந்து தில்லிக்கும், இந்திய நாட்டிற்கும் அவா் பெருமை சோ்க்க வேண்டும் என்றாா் கேஜரிவால்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாய் சுதர்சன் அரைசதம் விளாசல்; குஜராத் டைட்டன்ஸுக்கு 4-வது வெற்றி!

பயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுக்கிறது காங்கிரஸ், திரிணமூல் : அமித் ஷா
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக லக்னௌ பந்துவீச்சு!

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் 4வது காலாண்டு லாபம் 5% உயர்வு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

