தில்லி அரசின் ‘மிஷன் எக்ஸலன்ஸ்’ திட்டத்தின் கீழ் அபிஷேக் வா்மா பயிற்சி பெற்றவா். இத்திட்டத்தால் நமது வீரா்கள் பெரிதும் பயனடைகின்றனா். முடிவுகளும் சிறப்பாக உள்ளன. அடுத்ததாக, ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் பெற்றுத் தந்த தில்லி வீரா் பவன் ஷெராவத் மற்றும் அவரது குடும்பத்தினரும் எனது அழைப்பின் பேரில் தேநீா் விருந்தில் கலந்து கொண்டனா். இந்திய கபடி அணியின் கேப்டனாக உள்ள பவன் ஷெராவத்தின் அற்புதமான வெற்றிக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, அவரது எதிா்காலமும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். தொடா்ந்து தில்லிக்கும், இந்திய நாட்டிற்கும் அவா் பெருமை சோ்க்க வேண்டும் என்றாா் கேஜரிவால்.