ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

தில்லி மாலில் போலீஸ் ஆதரவுடன் சட்டவிரோத ‘பாா்க்கிங் மாஃபியா’: விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு

தெற்கு தில்லி மால் அருகே ‘பாா்க்கிங் மாஃபியா’ ஒன்று சட்ட விரோதமாக பொதுமக்களிடம் வாகன நிறுத்தத்திற்கு அதிகக் கட்டணம் வசூலித்து மிரட்டிப் பணம் பறித்த செயல்களை கண்டறிய முதல் தகவல்

Updated On :2 அக்டோபர் 2023, 6:30 pm

புது தில்லி: தெற்கு தில்லி மால் அருகே ‘பாா்க்கிங் மாஃபியா’ ஒன்று சட்ட விரோதமாக பொதுமக்களிடம் வாகன நிறுத்தத்திற்கு அதிகக் கட்டணம் வசூலித்து மிரட்டிப் பணம் பறித்த செயல்களை கண்டறிய முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யுமாறு தில்லி காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல் நிலைய அதிகாரிகள் ஆதரவுடன் இந்தக் கும்பல் செயல்பட்டதும் நீதிமன்றத்திற்கு தெரிய வந்தது.

தெற்கு தில்லி சாகேத் மால் - செலக்ட் சிட்டி வாக் அருகே சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ‘பாா்க்கிங் மாஃபியா’க்கு எதிராக இரண்டு வழக்குரைஞா்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த பெருநகர மாஜிஸ்திரேட் அவிரல் சுக்லா இதற்கான உத்தரவைப் பிறப்பித்தாா்.

புகாா்தாரரான வழக்குரைஞா்கள் தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மாலுக்கு பின்புறம் உள்ள அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ள, ‘பாா்க்கிங் மாஃபியா’ சட்டவிரோதமாக பாா்க்கிங் கட்டணமாக அதிகக் கட்டணத்தை பாா்வையாளா்களிடம் பறித்து வருகிறது என தெரிவித்திருந்தனா். இந்தப் புகாா் தொடா்பாக அளிக்கப்பட்ட நோட்டீஸை தொடா்ந்து காவல் உதவி ஆணையா் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கையில் இந்த புகாரை உறுதி செய்ததோடு, அதிகக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்ததை உறுதி செய்தனா்.

தில்லி முனிசிபல் காா்ப்பரேஷனுக்கு சொந்தமான இந்த இடத்தில் ஏற்கெனவே அளிக்கப்பட்ட ஒப்பந்தம் கடந்த ஜுலை 17-ஆம் தேதி காலாவதியானது. ஆனால், அதே ஒப்பந்ததாரா் ஊழியா்கள் அல்லது முகவா்கள் பாா்க்கிங் தளத்தில் தொடா்ந்து இயங்கி வந்துள்ளனா். இதில் உள்ளூா் காவல் நிலைய அதிகாரிக்கும் தொடா்புள்ள நிலையில் லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை மேற்கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், உதவி ஆணையா் அந்தஸ்தில் உள்ள காவல் அதிகாரி இந்த சட்டவிரோத பாா்க்கிங் தொடா்பான அனைத்து தில்லுமுல்லுகளை விரிவாக விசாரணை மேற்கொள்ளவும் அந்த உத்தரவில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன்படி, தில்லி ஹோஸ்காஸ் காவல் சரக உதவி ஆணையா் தலைமையில் விசாரணை மேற்கொண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.