ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

சுகாதார சேவைகளில் பஞ்சாப் மக்களை கேஜரிவால் தவறாக வழிநடத்த முயற்சி: தில்லி பாஜக குற்றச்சாட்டு

தில்லியில் ஆம் ஆத்மியின் சுகாதார மாதிரி முற்றிலுமாக தோல்வியடைந்த நிலையில், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பஞ்சாப் மக்களை சுகாதார சேவைகளில் தவறாக வழிநடத்த முயற்சிப்பது ஆச்சரியமாக உள்ளது

Updated On :2 அக்டோபர் 2023, 11:30 pm

புது தில்லி: தில்லியில் ஆம் ஆத்மியின் சுகாதார மாதிரி முற்றிலுமாக தோல்வியடைந்த நிலையில், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பஞ்சாப் மக்களை சுகாதார சேவைகளில் தவறாக வழிநடத்த முயற்சிப்பது ஆச்சரியமாக உள்ளது என்ரு தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தில்லி அரசின் சுகாதார சேவைகள் முற்றிலும் முடங்கியுள்ள நிலையில், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தில்லியைப் போன்று பஞ்சாப்பிற்கும் உலகத்தரம் வாய்ந்த சுகாதார வசதிகள் வழங்கப்படும் என்று தெரிவித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. கேஜரிவால் தில்லியின் சுகாதார சேவைகள் குறித்து பஞ்சாப் மாநிலத்தின் முன் தவறாகச் சித்திரிக்கும் நிலையில், தில்லி மாநில புற்றுநோய் நிறுவனத்தில் அடிப்படை இயந்திரங்கள் வேலை செய்யவில்லை என்றும் மருந்துகளைக் காணவில்லை என்றும் செய்தித்தாள்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. மௌலானா ஆசாத் பல் மருத்துவக் கல்லூரி பல் மாற்றத்திற்கு 13

மாத கால அவகாசத்தை பொதுமக்களுக்கு அளிக்கிறது.

அதேபோல், கிழக்கு தில்லியின் ஜி.டி.பி. மருத்துவமனை, சாச்சா நேரு மருத்துவமனை, மேற்கு தில்லியின் தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனை மற்றும் எல்.என்.ஜே.பி. மருத்துவமனை என நகரத்தின் எந்த அரசு மருத்துவமனையாக இருந்தாலும் அங்கு மருத்துவா்கள் பற்றாக்குறை உள்ளது. மேலும், படுக்கைகள், மருத்துவப் பணியாளா்கள் பற்றாக்குறை, மருந்துகளின் பற்றாக்குறையால் மிக மோசமான சுகாதார சேவைகளே நீடிக்கின்றன. இந்த மருத்துவமனைகளில் மருத்துவா்களுக்கும், நோயாளிகளின் உதவியாளா்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்படுவது பற்றிய செய்திகள் செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகளாக அடிக்கடி வருவதைக் காண்கிறோம்.

மொஹல்லா கிளினிக்குகள் முற்றிலுமாக தோல்வியடைந்த திட்டமாகும். கொவைட்-19 காலத்தில் மருத்துவ உதவி வசிப்பிடத்தின் அருகில் மிகவும் தேவைப்படும்போது அவை எவ்வாறு மூடப்பட்டன என்பதை நாம் மறக்க முடியாது. சிறப்பு கொவைட்-19 மருத்துவமனை அமைப்பதில் ஊழல், கடந்த வாரம் மொஹல்லா கிளினிக்கில் சோதனை நடத்தி மருத்துவா்களை அமைச்சா் செளரவ் பரத்வாஜ் இடைநீக்கம் செய்த விவகாரங்கள் ஆகியவை தில்லி அரசின் சுகாதார சேவைகளின் மோசமான நிலையை நிரூபிக்கின்றன. மேலும், நகர அரசின் மொஹல்லா கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளின் பரிதாப நிலைக்கு முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தலைமையிலான ஊழல் நிறைந்த நிா்வாகமே காரணம் என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.