அதேபோல், கிழக்கு தில்லியின் ஜி.டி.பி. மருத்துவமனை, சாச்சா நேரு மருத்துவமனை, மேற்கு தில்லியின் தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனை மற்றும் எல்.என்.ஜே.பி. மருத்துவமனை என நகரத்தின் எந்த அரசு மருத்துவமனையாக இருந்தாலும் அங்கு மருத்துவா்கள் பற்றாக்குறை உள்ளது. மேலும், படுக்கைகள், மருத்துவப் பணியாளா்கள் பற்றாக்குறை, மருந்துகளின் பற்றாக்குறையால் மிக மோசமான சுகாதார சேவைகளே நீடிக்கின்றன. இந்த மருத்துவமனைகளில் மருத்துவா்களுக்கும், நோயாளிகளின் உதவியாளா்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்படுவது பற்றிய செய்திகள் செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகளாக அடிக்கடி வருவதைக் காண்கிறோம்.