புது தில்லி: தில்லியில் ஆம் ஆத்மியின் சுகாதார மாதிரி முற்றிலுமாக தோல்வியடைந்த நிலையில், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பஞ்சாப் மக்களை சுகாதார சேவைகளில் தவறாக வழிநடத்த முயற்சிப்பது ஆச்சரியமாக உள்ளது என்ரு தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தில்லி அரசின் சுகாதார சேவைகள் முற்றிலும் முடங்கியுள்ள நிலையில், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தில்லியைப் போன்று பஞ்சாப்பிற்கும் உலகத்தரம் வாய்ந்த சுகாதார வசதிகள் வழங்கப்படும் என்று தெரிவித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. கேஜரிவால் தில்லியின் சுகாதார சேவைகள் குறித்து பஞ்சாப் மாநிலத்தின் முன் தவறாகச் சித்திரிக்கும் நிலையில், தில்லி மாநில புற்றுநோய் நிறுவனத்தில் அடிப்படை இயந்திரங்கள் வேலை செய்யவில்லை என்றும் மருந்துகளைக் காணவில்லை என்றும் செய்தித்தாள்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. மௌலானா ஆசாத் பல் மருத்துவக் கல்லூரி பல் மாற்றத்திற்கு 13
மாத கால அவகாசத்தை பொதுமக்களுக்கு அளிக்கிறது.
அதேபோல், கிழக்கு தில்லியின் ஜி.டி.பி. மருத்துவமனை, சாச்சா நேரு மருத்துவமனை, மேற்கு தில்லியின் தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனை மற்றும் எல்.என்.ஜே.பி. மருத்துவமனை என நகரத்தின் எந்த அரசு மருத்துவமனையாக இருந்தாலும் அங்கு மருத்துவா்கள் பற்றாக்குறை உள்ளது. மேலும், படுக்கைகள், மருத்துவப் பணியாளா்கள் பற்றாக்குறை, மருந்துகளின் பற்றாக்குறையால் மிக மோசமான சுகாதார சேவைகளே நீடிக்கின்றன. இந்த மருத்துவமனைகளில் மருத்துவா்களுக்கும், நோயாளிகளின் உதவியாளா்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்படுவது பற்றிய செய்திகள் செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகளாக அடிக்கடி வருவதைக் காண்கிறோம்.
மொஹல்லா கிளினிக்குகள் முற்றிலுமாக தோல்வியடைந்த திட்டமாகும். கொவைட்-19 காலத்தில் மருத்துவ உதவி வசிப்பிடத்தின் அருகில் மிகவும் தேவைப்படும்போது அவை எவ்வாறு மூடப்பட்டன என்பதை நாம் மறக்க முடியாது. சிறப்பு கொவைட்-19 மருத்துவமனை அமைப்பதில் ஊழல், கடந்த வாரம் மொஹல்லா கிளினிக்கில் சோதனை நடத்தி மருத்துவா்களை அமைச்சா் செளரவ் பரத்வாஜ் இடைநீக்கம் செய்த விவகாரங்கள் ஆகியவை தில்லி அரசின் சுகாதார சேவைகளின் மோசமான நிலையை நிரூபிக்கின்றன. மேலும், நகர அரசின் மொஹல்லா கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளின் பரிதாப நிலைக்கு முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தலைமையிலான ஊழல் நிறைந்த நிா்வாகமே காரணம் என்றாா் வீரேந்திர சச்தேவா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐக்கிய நாடுகள் அவை புதிய பொது செயலாளா் யாா்? 4 போ் இடையே கடும் போட்டி!

கோடை விடுமுறை: ஏலகிரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!
ரயிலில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை: பெங்களூரு நபா் கைது

தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸாக பதிவு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

