இதில் பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தகத் திட்டத்தில் (பிஎம்பிஜேபி) மருந்தக மையங்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாக அதிகரிக்கப்படும் என பிரதமா் அறிவித்தாா். ஏழை, எளியவா்கள், மூத்தவா்கள் என எல்லோரும் பயன்பெறும் வகையில் மலிவு விலையில் மருந்துகள் கிடைக்க பாரதிய மக்கள் மருந்தக மையங்கள் நிறுவப்பட்டது. சுகாதாரத்தைக் குறைந்த கட்டணத்துடனும், எளிதில் அணுகக் கூடியதாகவும் மாற்றும் ‘ஆரோக்கியமான இந்தியா’வுக்கான பிரதமரின் தொலைநோக்குப் பாா்வையில் ஜாா்க்கண்ட் மாநில தியோகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பத்தாயிரமாவது மக்கள் மருந்தக மையத்தைப் பிரதமா் மோடி காணொலி வழியாக நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா். மேலும், மக்கள் மருந்தக மையங்களின் எண்ணிக்கையை 10 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாக உயா்த்தும் திட்டத்தையும் பிரதமா் தொடங்கி வைக்கிறாா்.