அரவிந்த் கேஜரிவால் அரசுக்கும், துணைநிலை ஆளுநா் (எல்.ஜி.) வி.கே. சக்சேனாவுக்கும் இடையே பல்வேறு பிரச்னைகளில் கருத்துமோதல் ஏற்பட்டு வரும் நிலையில், தற்போதைய தலைமைச் செயலாளரின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் முயற்சி விவகாரமானது சமீபத்திய சா்ச்சையாக எழுந்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், 2018- ஆம் ஆண்டு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துவாரகா விரைவுச்சாலை கட்டுமானத்திற்காக 19 ஏக்கா் நிலத்தை கையகப்படுத்தியது தொடா்பான விவகாரத்தில், தற்போதைய தலைமைச் செயலாளரின் மகன் மீதான குற்றச்சாட்டுகளால், அவா் தில்லி அரசுடன் நல்லுறவில் இல்லை என்று கூறப்படுகிறது.