எனினும், நான்கு வாரங்களுக்குப் பிறகும் வழக்கு விசாரணைக்கு வராததால், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், சஞ்சய் கரோல் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை தமிழக அரசின் தரப்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞா் வி.கிருஷ்ணமூா்த்தி ஆஜராகி, முந்தைய விசாரணையின் போது, ‘இந்த வழக்கு நான்கு வாரங்களுக்குப் பிறகு பட்டியலிட உத்தரவிடப்பட்டிருந்தது. வழக்கை விசாரணைக்குப் பட்டியலிடப்பட வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் தீா்ப்பாயம் அமைப்பதற்கான உத்தரவு மட்டுமே பிறப்பிக்கப்பட வேண்டியிருக்கிறது’ என்று கூறினாா். இதையடுத்து, ஜனவரி 23-ஆம் தேதி இந்த வழக்கை விசாரணைக்குப் பட்டியலிட நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.