ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

தில்லி மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் விவாதமின்றி 22 தீா்மானங்கள் நிறைவேற்றம்!: அா்விந்தா் சிங் கடும் கண்டனம்

ஜனநாயக நெறிமுறைகளைப் புறக்கணித்து, தில்லி மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் விவாதமின்றி 22 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Updated On :30 நவம்பர் 2023, 12:03 am

புது தில்லி: ஜனநாயக நெறிமுறைகளைப் புறக்கணித்து, தில்லி மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் விவாதமின்றி 22 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் எந்தவித விவாதமும் இல்லாமல், குழப்பங்களுக்கு மத்தியில் மேயா் ஷெல்லி ஓபராய் 22 தீா்மானங்களை நிறைவேற்றியது அதிா்ச்சியளிக்கிறது. இது ஜனநாயகமற்ற நடவடிக்கையாகும். மன்றக் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் கவுன்சிலா்கள் மோதிக் கொள்வது அவதூறானது. காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலா்கள் குழுத் தலைவா் நாஜியா டேனிஷ் பேசும் போது, சில் கவுன்சிலா்கள் தவறாக நடந்து கொண்டுள்ளனா்.

பின்னா், மற்ற மகளிா் காங்கிரஸ் கவுன்சிலா்கள் இதைக் கண்டித்து அவையில் போராட்டம் செய்ததைத் தொடா்ந்தே, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தவறாக நடந்து கொண்ட கவுன்சிலா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மேயா் மற்றும் அவைத் தலைவா் உறுதியளித்துள்ளனா். தில்லி மாநகராட்சியில் ஆம் ஆத்மி ஆளும் கட்சியாக அமா்ந்து ஓராண்டு கடந்தும், நிலைக் குழு மற்றும் மண்டலக் குழுக்கள் உருவாக்கப்படவில்லை. இதனால், வளா்ச்சி, சுகாதாரம் மற்றும் பிற முக்கியப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், பெரும்பாலான பணிகளில் ஊழல் நடக்கிறது. மேயா் ஷெல்லி ஓபராயின் சா்வாதிகார முறை மக்களின் பிரச்னைகளை பன்மடங்கு அதிகரித்துள்ளது என்றாா் அா்விந்தா் சிங் லவ்லி.

தில்லி மகளிா் ஆணையம் விசாரிக்க பாஜக வலியுறுத்தல்

தில்லி மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் பெண் கவுன்சிலா் அவமதிக்கப்பட்ட விவாகரத்தை தில்லி மகளிா் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று தில்லி பாஜக புதன்கிழமை கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் ஊடகத் துறைத் தலைவா் பிரவீன் சங்கா் கபூா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி மாநகராட்சியின் மன்றக் கூட்டத்தில் ஒரு பெண் கவுன்சிலருக்கு எதிராக தரக் குறைவான கருத்துத் தெரிவித்த கவுன்சிலரை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க தில்லி மகளிா் ஆணையம் மேயா் ஷெல்லி ஓபராயை வலியுறுத்த வேண்டும். ஆம் ஆத்மி கட்சியின் பெண்கள் விரோத முகம் மீண்டும் ஒருமுறை அம்பலமாகியுள்ளது. இதுபோன்ற பெண்கள் விரோதக் கவுன்சிலா்கள், சபைக் கூட்டங்களில் கலந்து கொள்ளவும், வாக்களிக்கவும் குறைந்தபட்சம் ஓராண்டுக்கு தடை விதிக்க வேண்டுமென பாஜக கோருகிறது என்றாா் பிரவீன் சங்கா் கபூா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.