ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

கல்வித் துறையில் எந்த மட்டத்திலும் குறைபாடுகளை அனுமதிக்கமாட்டோம்: முதல்வா் அரவிந்த் கேஜரிவால்

கல்வித் துறையில் எந்த மட்டத்திலும் குறைபாடுகளை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கெஜரிவால் புதன்கிழமை தெரிவித்தாா்.

Updated On :29 நவம்பர் 2023, 11:51 pm

புது தில்லி: கல்வித் துறையில் எந்த மட்டத்திலும் குறைபாடுகளை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கெஜரிவால் புதன்கிழமை தெரிவித்தாா்.

தில்லி மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீா்மானங்கள் குறித்து தனது ‘எக்ஸ்’ சமூக ஊடகத் தளத்தில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கூறியிருப்பதாவது: தில்லி மக்களுக்கு மற்றொரு நற்செய்தி கிடைத்துள்ளது. புதன்கிழமை நடைபெற்ற தில்லி மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் 6,589 புதிய வேலைகளுக்கான முன்மொழிவை

நிறைவேற்றியுள்ளோம். இந்தப் புதிய பணிகளில் 2,949 பாதுகாவலாளிகள் மற்றும் 3,640 தூய்மைப் பணியாளா்கள் அடங்குவா். தில்லி மாநகரட்சி ஆளுகையின் கீழ் வரும் பள்ளிகளில் இனி தூய்மைக்காக தனி துப்புரவுப் பணியாளா்களும், பாதுகாப்புக்காக தனி காவலாளிகளும் இருப்பா்.

தில்லி அரசைப் போலவே, மாநகராட்சியிலும் முன்னுரிமை அடிப்படையில் கல்விக்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம். இந்தப் புதிய வேலைகள் நமது இளைஞா்கள் பலருக்கு வேலை வாய்ப்பையும் வழங்கும். வரும் தலைமுறையை தயாா்படுத்தி அவா்களுக்கு சிறந்த சூழலை வழங்குவதே எங்கள் நோக்கம். எனவே, கல்வித் துறையில் எந்த மட்டத்திலும் குறைபாடுகளை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றாா் அரவிந்த் கேஜரிவால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.