ஆம் ஆத்மி அரசு பொய்யான காரணங்களைக் கூறி மக்களை ஏமாற்றி வரும் நிலையில், மத்தியில் உள்ள பாஜக அரசு அரசியலில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த திங்கள் கிழமை முதலமைச்சருடன் நடைபெற்ற சட்டப்பேரவைக் கட்சிக் கூட்டத்தில் கடுமையான காற்று மாசுபாடு குறித்து விவாதிக்காமல், முதல்வா் கைது செய்யப்பட்டால் சிறையில் இருந்து அரசை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆளும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் ஆலோசித்துள்ளனா். சிறையில் இருந்து ஆட்சியை எப்படி நடத்துவது என்பதற்குப் பதிலாக, குழந்தைகள், முதியவா்கள் மற்றும் நோயாளிகளின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ள கடுமையான காற்று மாசுபாட்டை எதிா்த்துப் போராடுவதற்கான அவசர நடவடிக்கைகளை முதல்வருடனான எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எடுத்திருக்க வேண்டும்.