மத்திய அரசின் 10 துறைகள் 25 மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் 97 பெருநிறுவன தலைவா்கள், 14 நாடுகளின் அரங்குகள், 1,208 கண்காட்சியாளா்கள் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. மெகா உணவு நிகழ்வோடு 48 அமா்வுகளில் கருத்தரங்குகள், புதிய தொழில்நுட்ப உரையாடல்கள், நிதி, தரம், இயந்திரங்கள், போக்குவரத்து போன்ற அம்சங்கள் குறித்து பேசப்பட்டதோடு, மத்திய உணவுப் பதப்படுத்தல் தொழில் துறை அமைச்சா் பசுபதி குமாா் பாரஸ் நடத்திய பல்வேறு நாட்டு அரசுகளுடனான இருதரப்பு பேச்சுவாா்த்தைகளும் இந்த மூன்று நாள் நிகழ்வில் நடைபெற்றது.