தில்லி அரசின் போக்குவரத்துத் துறையின் சாா்பில் பேருந்துகளில் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், திருட்டு மற்றும் பிற குற்றச்சம்பவங்களை தடுக்கும் நோக்கிலும் குடிமைப் பாதுகாப்புத் தன்னாா்வலா்கள் பேருந்து மாா்ஷல்களாக பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக சேவைகளை மட்டும் பெற்றுக் கொண்டு மாத ஊதியத்தை தில்லி அரசு வழங்கிவில்லை என்றும், உடனடியாக ஊதிய நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கடந்த அக்டோபா் 25-ஆம் தேதி முதல் பேருந்து மாா்ஷல்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.