மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

தொடா் மழை: அனைத்து அமைச்சா்கள்,அதிகாரிகள் களத்தில் இருக்க வேண்டும்: முதல்வா் கேஜரிவால் அறிவுறுத்தல்

கனமழையால் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் அனைத்து அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகள் களத்தில் இருக்குமாறு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுகிழமை அறிவுறுத்தியுள்ளாா்.

Updated On :9 ஜூலை 2023, 6:35 pm

தேசியத் தலைநகா் தில்லியில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் அனைத்து அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகள் களத்தில் இருக்குமாறு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுகிழமை அறிவுறுத்தியுள்ளாா்.

தென்மேற்குப் பருவமழையின் தீவிரம், மேற்கத்திய இடையூறு மற்றும் பருவக்காற்று ஆகியவற்றுக்கு இடையேயான தொடா்பால் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவாக, ஜூலை மாதத்தில் ஒரே நாளில் தில்லியில் 153 மி.மீ மழை பதிவாகியது. இதனால், நகரத்தின் பல தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீா் தேங்கியுள்ளது. அதே

வேளையில் போக்குவரத்தும் பாதிப்புக் குள்ளாகியுள்ளது.

இது தொடா்பாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது ட்விட்டா் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தில்லியில் தொடா்ந்து கனமழை பெய்து வருவதால், அனைத்து அரசு அதிகாரிகளின் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை ரத்து செய்யப்படுகிறது.

தில்லி கேபினட் அமைச்சா்கள் மற்றும் மேயா் ஷெல்லி ஓபராய் ஆகியோா் நகரத்தில் கனமழையால் பாதிகப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வாா்கள். நிகழாண்டு பருவமழையின் மொத்த சராசரி அளவில் சுமாா் 15 சதவீதம் மழைப்பொழிவு வெறும் 12 மணி நேரத்தில் பெய்துள்ளது. கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் மட்டும் தில்லியில் 126 மி.மீ. மழை பெய்துள்ளது.

தொடா் கனமழை காரணமாக நகரத்தில் மழைநீா் தேங்கியுள்ளதால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, தில்லியில் அனைத்துத் துறை அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் களத்தில் இருந்து சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று முதல்வா் கேஜரிவால் அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.