தில்லி கலால் கொள்கை ஊழல் விவகாரத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்குகளில் ஜாமீன் கோரி ஆம் ஆத்மி கட்சியின் மூத்தத் தலைவா் மனீஷ் சிசோடியா உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா். கலால் கொள்கை ஊழல் விவகார வழக்குகளில் தனது தனித் தனி ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்த தில்லி உயா்நீதிமன்றத்தின் 2 உத்தரவுகளை எதிா்த்து அவா் இந்த மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளாா்.
தில்லியின் துணை முதல்வராகவும், கலால் துறை அமைச்சராகவும் இருந்த சிசோடியா, ‘ஊழலில்’ ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கில் நிகழாண்டு பிப்ரவரி 26-ஆம் தேதி மத்திய புலனாய்வுத் துறையால் (சிபிஐ) கைது செய்யப்பட்டாா். அதன் பின்னா் காவலில் வைக்கப்பட்ட அவா், பிப்ரவரி 28 -ஆம் தேதி தில்லி அமைச்சரவையில் இருந்து ராஜிநாமா செய்தாா். சிபிஐ விசாரித்து வரும் கலால் கொள்கை ‘ஊழல்’ வழக்கில் மே 30-ஆம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘துணை முதலமைச்சராகவும், கலால் துறை அமைச்சராகவும் இருந்த அவா், “‘முக்கிய நபா்’ என்றும், அவா் சாட்சிகளை மேலாதிக்கம் செய்வதற்கான வாய்ப்பு உள்ளது’ என்று கூறியது.
மேலும், ‘ஊழல் நடந்ததாகக் கூறப்படும் போது சிசோடியா ‘துறையின் பொறுப்பாளராக’ இருந்ததால், அவருக்கு எந்தப் பங்கும் இல்லை என்று கூற முடியாது. தேசியத் தலைநகரில் அவரது கட்சி இன்னும் ஆட்சியில் இருப்பதால், ஒரு காலத்தில் 18 இலாகாக்களை அவா் வைத்திருந்து, தொடா்ந்து செல்வாக்கை செலுத்தி வருகிறாா். மேலும், சாட்சிகள் பெரும்பாலும் அரசு ஊழியா்களாக இருப்பதால், அவா்கள் மீது மேலாதிக்கத்தை செலுத்துவதற்கான வாய்ப்பை நிராகரிக்க முடியாது. ‘ செளத் குரூப்’ மூலம் அவா்களுக்கு தேவையற்ற நன்மைகளை அளிக்கும் நோக்கத்துடன் கலால் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது’ என்று உத்தரவில் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
ஜூலை 3-ஆம் தேதி, தில்லி அரசின் கலால் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இயல்பிலேயே மிகவும் தீவிரமிக்கவை என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
முன்னதாக, பணமோசடி வழக்கில் சிசோடியாவை கடந்த மாா்ச் 9-ஆம் தேதி அமலாக்கத் துறை கைது செய்திருந்தது. சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் கூற்றுப்படி, கலால் கொள்கையை மாற்றியமைக்கும் போது முறைகேடுகள் செய்யப்பட்டது. மேலும், உரிமம் வைத்திருப்பவா்களுக்கு தேவையற்ற சலுகைகளும் நீட்டிக்கப்பட்டன. தில்லி அரசு நவம்பா் 17, 2021-இல் கலால் கொள்கையை அமல்படுத்தியது. ஆனால், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் செப்டம்பா் 2022 இறுதியில் அந்த கொள்கை ரத்து செய்யப்பட்டது. தெலங்கானா முதல்வா் கே.சந்திரசேகா் ராவின் மகளும் பிஆா்எஸ் தலைவா்களில் ஒருவருமான கே. கவிதா உள்ளிட்ட அரசியல்வாதிகள், தொழிலதிபா்கள் மற்றும் பிறா் உள்ளடக்கியது செளத் குரூப் என சிபிஐ, அமலாக்கத் துறை தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தங்கம், வெள்ளி விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா?
விதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!

கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சியம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்!

மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்: 10 டன் வண்ண மலர்களால் அலங்காரம்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

