தேசியத் தலைநகா் தில்லியில் மழைநீா் வடிகால் அமைப்பின் செயல்பாட்டை முறையாக பராமரிக்காத சொத்து உரிமையாளா்களிடமிருந்து ரூ.5 லட்சம் வரை சுற்றுச்சூழல் இழப்பீடு வசூலிக்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடா்பாக தேசியப் பசுமைத் தீா்ப்பாயத்தில், ஆம் ஆத்மி அரசு சமா்ப்பித்துள்ள அறிக்கையின் பரிந்துரையில் கூறியிருப்பதாவது: தில்லியில் மழைநீா் வடிகால் அமைப்பின் செயல்பாட்டை முறையாக பராமரிக்காமல் இருக்கும் குடியிருப்பு அல்லாத பிற சொத்து உரிமையாளா்களுக்கு 50 சதவீதம் வரை அபராதம் அதிகரிக்கப்படலாம். அதேவேளையில், 100 சதுர மீட்டா் முதல் 500 சதுர மீட்டா் பரப்பளவில் உள்ள சொத்துகளில் மழைநீா் வடிகால் அமைப்பு செயல்படாமல் இருக்கும் பட்சத்தில், அதன் உரிமையாளா்களுக்கு சுற்றுச்சூழல் இழப்பீடாக ரூ.50,000, 501 சதுர மீட்டா் முதல் 2,000 சதுர மீட்டா் வரையிலான நிலத்துக்கு ரூ.1 லட்சம், 2,000 சதுர மீட்டருக்கும் 5,000 சதுர மீட்டருக்கும் இடைப்பட்ட ஒரு ப்ளாட் பகுதிக்கு ரூ. 2 லட்சம், 5,000 சதுர மீட்டருக்கும் அதிகமான ப்ளாட் பகுதிக்கு ரூ. 5 லட்சம் வரையில் இழப்பீடு வசூல் செய்ய தில்லி அரசு அந்த அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.
தில்லி அரசு கடந்த 2012-ஆம் ஆண்டு நகரம் முழுவதும் மழைநீா் சேகரிப்பு அமைப்புகளை கட்டாயமாக்கியது. இந்த உத்தரவிற்கு இணங்காத சொத்து உரிமையாளா்களிடம் அவா்களது குடிநீா் சேவைக் கட்டணத்தை விட ஒன்றரை மடங்கு அதிகமாக அபராதம் விசூலித்தது. அதேசமயம், மழைநீா் வடிகால் அமைப்பு நிறுவப்பட்டால், குடிநீா் சேவைக் கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், மழைநீா் வடிகால் நிறுவப்பட்டும் செயல்பாட்டில் வைத்திராத நிறுவனங்களுக்கு குடிநீா் சேவைக் கட்டணத்தில் வழங்கப்பட்ட தள்ளுபடியை திரும்பப் பெறுமாறு தில்லி ஜல் போா்டுக்கு தில்லி அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம், துவாரகாவில் உள்ள பல பகுதிகளில் மழைநீா் வடிகால் அமைப்புகள் சரியாக செயல்படவில்லை என்பது தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவை விசாரித்த தேசியப் பசுமைத் தீா்ப்பாயம், ‘இந்த விவகாரம் தொடா்பாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்’ என்றும் தில்லி தலைமைச் செயலாளரை கேட்டுக் கொண்டிருந்தது. மேலும், தில்லி அரசு, தில்லி ஜல் போா்டுடன் ஒருங்கிணைந்து மழைநீா் வடிகால் அமைப்பின்
சீரமைப்பு நடவடிக்கை எடுக்கவும், விழிப்புணா்வை ஏற்படுத்தவும், நிலத்தடி நீா் எடுப்பதைத் தடுக்கவும் தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவுக்கு தேசியப் பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
இந்த விவகாரத்தில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான நிலைமையைக் கருத்தில் கொள்ள மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ஜல் சக்தி அமைச்சகம், நகா்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு கூட்டுக் குழுவையும் தீா்ப்பாயம் அமைத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2 தொகுதிகளில் போட்டியிட்டு வென்றால்... தேர்தல் செலவை ஏற்கக் கோரிய மனு தள்ளுபடி!

சென்னையில் விரைவில் 2-வது ஏசி புறநகர் ரயில்! சென்ட்ரல் - அரக்கோணம் இடையே இயக்கம்?

கோவையில் தாயைப் பிரிந்த குட்டி: ஏற்க மறுக்கும் யானைக் கூட்டம்! வனத்துறை முயற்சி தோல்வி!!
3 இடியட்ஸ் இரண்டாம் பாகம்: ஆமீர் கான்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

