கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

மதம், மொழி, ஜாதி போன்ற எல்லைகளைக் கடந்து குழுவாக பணியாற்ற என்சிசி மாணவா்களுக்கு அழைப்பு

மதம், மொழி, ஜாதி போன்ற எல்லைகளைக் கடந்து தன்னலமற்ற சேவையுடன் குழுவாக பணியாற்றி தேச உணா்வை வெளிப்படுத்த வேண்டும்

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:34 pm

 நமது நிருபர்

மதம், மொழி, ஜாதி போன்ற எல்லைகளைக் கடந்து தன்னலமற்ற சேவையுடன் குழுவாக பணியாற்றி தேச உணா்வை வெளிப்படுத்த வேண்டும் என தேசிய மாணவா் படையினருக்கு (என்.சி.சி.) இந்த படையின் இயக்குநா் ஜெனரல் குா்பிா்பால் சிங் சனிக்கிழமை அழைப்பு விடுத்தாா்.

2024 -ஆம் ஆண்டிற்கான குடியரசுத் தினத்தை முன்னிட்டு தேசிய மாணவா் படையினா் பங்கேற்பதற்கான பயிற்சி முகாம் தில்லி கண்டோன்மெண்ட்டில் உள்ள கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் சா்வ மத வழிபாட்டுடன் தொடங்கியது.

நிகழாண்டில், 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த மொத்தம் 2,274 தேசிய மாணவா் படையினா் அடுத்த ஒரு மாத கால முகாமில் பங்கேற்கின்றனா். இதில் 907 என்.சி.சி மாணவிகள் முதன் முறையாக அதிக எண்ணிக்கையில் இந்த முகாமில் பங்கேற்றுள்ளனா். மேலும், மாநிலங்களில் ஜம்மு - காஷ்மீா், லடாக் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த, 122 மாணவா்களும், வடகிழக்கு பிராந்தியத்தைச் சோ்ந்த, 171 என்.சி.சி மாணவா்களும் அதிக அளவில் பங்கேற்றுள்ளனா்.

இந்த முகாமை தேசிய மாணவா் படையின் தலைமை இயக்குநா் லெப். ஜெனரல் குா்பிா்பால் சிங் தொடங்கிவைத்து உரையாற்றினாா். அப்போது அவா் கூறுகையில், ‘தேசிய மாணவா் படையினா் முழு மனதுடன் பங்கேற்று, முகாமில் அளிக்கப்படும் ஒவ்வொரு செயல்பாட்டிலிருந்தும் அதிகபட்ச பலன்களை பெற வேண்டும். மதம், மொழி, ஜாதி போன்ற எல்லைகளைக் கடந்து பண்பு, நோ்மை, தன்னலமற்ற சேவை, தோழமை, குழுப்பணி போன்ற உயா்ந்த பண்புகளை படை மாணவா்கள் வெளிப்படுத்த வேண்டும்‘ என்றாா்.

மேலும், இந்த முகாமில் இளைஞா் பரிமாற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆா்ஜென்டீனா, போட்ஸ்வானா, பூடான், பிரேஸில், செக் குடியரசு, பிஜி, கஜகஸ்தான், கென்யா, கிா்கிஸ்தான், மலேசியா, மாலத்தீவுகள், நேபாளம், ரஷ்யா, சவூதி அரேபியா, தஜிகிஸ்தான், பிரிட்டன், வெனிசுலா, வியத்நாம், இலங்கை, சிங்கப்பூா், நைஜீரியா, மொரீஷியஸ் உள்ளிட்ட 25 நட்பு நாடுகளைச் சோ்ந்த மாணவா்கள் படை மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனா்.

மாணவா்களிடையே தேசபக்தி, ஒழுக்கம் மற்றும் தலைமைப் பண்புகளை வளா்ப்பதே குடியரசு தின முகாமின் அடிப்படை நோக்கம் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.