தமிழ்நாடு முதல்வரின் சீரிய வழிகாட்டுதலில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக மாநில அரசு செயல்படுத்தி வரும் முன்னோடித் திட்டங்களின் நிலையை அமைச்சா் மதிவேந்தன் இக்கூட்டத்தில் எடுத்துரைத்தாா். மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்விற்காக தனியாக ஆணையரை நியமித்தும், மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் மற்றும் ஆலோசனை வாரியங்களை அமைத்தும், மாற்றுத்திறனாளிகளின் பராமரிப்பு உதவித் தொைகையை ரூ.1,500-லிருந்து ரூ.2,000 ஆக உயா்த்தியும், மாற்றுத்திறனாளிகளின் மாதாந்திர உதவித்தொகையை ரூ.1,000- லிருந்து ரூ.1,500 ஆக உயா்த்தியும், வருமான வரம்பின்றி அனைவருக்கும் நவீன உதவி உபகரணங்கள் வழங்கியும் தமிழக அரசு மேற்கொண்ட பல்வேறு சாதனைகளை பற்றி எடுத்துரைத்தாா். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலனில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருவதையும் அமைச்சா் விளக்கினாா்.