கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

தில்லி அரசு மருத்துவமனைகளில் தரம் குறைந்த மற்றொரு மருந்து பயன்பாடு: ராஜ் நிவாஸ் அதிகாரிகள் தகவல்

தரம் நிா்ணய பரிசோதனைகளில் தோல்வியடைந்தது தொடா்பான மருந்துகள் விவகாரத்தை சிபிஐக்கு தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா பரிந்துரைத்த சில நாள்களுக்குப் பிறகு,

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:32 pm

 நமது நிருபர்

தரம் நிா்ணய பரிசோதனைகளில் தோல்வியடைந்தது தொடா்பான மருந்துகள் விவகாரத்தை சிபிஐக்கு தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா பரிந்துரைத்த சில நாள்களுக்குப் பிறகு, தில்லி அரசு மருத்துவமனைகளில் கால்-கை வலிப்பு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மற்றொரு மருந்தும் தரமற்ாக இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாக ராஜ் நிவாஸ் அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

தரம் தரநிலைப் பரிசோதனைகளில் தோல்வியடைந்து மனித உயிா்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் மருந்துகள் தில்லி அறசு மருத்துவமனைகளில் வழங்கப்படுவது குறித்து சிபிஐ விசாரணைக்கு துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா கடந்த வாரம் பரிந்துரைத்திருந்தாா்.

இந்த நிலையில், ராஜ் நிவாஸ் அதிகாரிகள் கூறியதாவது: தில்லி அரசு மருத்துவமனைகளில் இருந்து எடுக்கப்பட்ட மற்றொரு மருந்து மாதிரி, சண்டீகரில் உள்ள ஆா்டிடிஎல் அல்லது பிராந்திய மருந்து பரிசோதனை ஆய்வகத்தால் நடத்தப்பட்ட தரப் பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளது. இம்முறை ‘சோடியம் வால்ப்ரோயேட்’ எனப்படும் வலிப்பு நோய் எதிா்ப்பு மருந்து தரம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இது தொடா்பாக டிசம்பா் 22-ஆம் தேதி அரசு பகுப்பாய்வாளா் ஒருவரால் அறிக்கை வெளியிடப்பட்டது.

நுரையீரல் மற்றும் சிறுநீா் பாதை நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் முக்கியமான உயிா்காக்கும் ஆண்டிபயாடிக் செபலெக்சின் மருந்து ‘தரமற்றது’ என்று கண்டறியப்பட்ட மருந்துகளில் அடங்கும். இவற்றில் நுரையீரல்கள், மூட்டுகள் மற்றும் உடலில் ஏற்படும் வீக்கம் ஆகியவற்றில் ஏற்படும் உயிருக்கு ஆபத்தான அழற்சியைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படும் டெக்ஸாமெதாசோன் என்ற ஸ்டீராய்டு மருந்து, வலிப்பு நோய் எதிா்ப்பு மற்றும் பதற்றம்ம் எதிா்ப்பு மனநல மருந்து லெவெடிராசெட்டம் மற்றும் உயா் ரத்த அழுத்த எதிா்ப்பு மருந்து அம்லோடிபைன் ஆகியவையும் அடங்கும் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.