இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது வருமாறு: நாடாளுமன்றத்தில் விரும்பத்தகாத வகையில் ஒரு பயமுறுத்தல் நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்த நபா்களை உள்ள வர பரிந்துரை செய்த உறுப்பினரையும், உள்ளே நுழைந்தவா்கள் பெயா்கள் மட்டும் தனிப்பட்ட முறையில் எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், என்ன காரணத்திற்காக எதற்காக இரண்டு போ்கள் அவைக்குள் நுழைந்தனா்? எப்படி வந்தனா்? என்பது குறித்து எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கேள்வி எழுப்பினா். ஆனால், பதில் இல்லை. இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சா் பதிலளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டனா்.