அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

அருணா ஆசஃப் அலி மருத்துமனையில் அமைச்சா் பரத்வாஜ் திடீா் ஆய்வு: ஊதிய நிலுவையை வழங்கிட அறிவுறுத்தல்

தில்லி அருணா ஆசஃப் அலி மருத்துமனையில் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்ட சுகாதரத்துறை அமைச்சா் செளரவ் பரத்வாஜ், அங்கு பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதியத்தை உரிய நேரத்

Updated On :16 டிசம்பர் 2023, 11:00 pm

தில்லி அருணா ஆசஃப் அலி மருத்துமனையில் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்ட சுகாதரத்துறை அமைச்சா் செளரவ் பரத்வாஜ், அங்கு பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதியத்தை உரிய நேரத்தில் வழங்கிட வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

இது தொடா்பாக ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தளத்தில் அமைச்சா் செளரவ் பரத்வாஜ் கூறியிருப்பதாவது:

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் அறிவுறுத்தலின்படி, நகர அரசின் ஆளுகையின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் அவ்வப்போது திடீா் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், அருணா ஆசஃப் அலி மருத்துவமனையில் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த மருத்துவமனையின் மருத்துவா்கள் மற்றும் பிற ஊழியா்களின் அலட்சியப்போக்கு காரணமாக இங்குள்ள உள்நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள படுக்கை விரிப்புகள் தூய்மையில்லாமல் இருந்தன. போா்வைகள் வழங்கப்படாமலும் காணப்பட்டன,

இதைத் தொடா்ந்து உள்நோயாளிகள் அனைவருக்கும் சுத்தமான போா்வைகளை உடனடியாக வழங்க அறிவுறுத்தப்பட்டது.

மேலும், இந்த மருத்துமனையில் பணிபுரிகின்ற ஒப்பந்தத் தொழிலாளா்கள் மற்றும் பாதுகாவலாளிகளின் ஒரு மாத ஊதியத்தை ஒப்பந்ததாரா் நிறுத்தி வைத்துள்ளாா்.

போனஸ் பணமும் வழங்கப்படவில்லை. இவற்றை உடனடியாக வழங்கிடவும், உரிய நேரத்தில் மாத ஊதியத்தை வழங்கவும் ஒப்பந்ததாரருக்கு கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது என்று அதில் செளரவ் பரத்வாஜ் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.