அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

தில்லி அரசுப் பள்ளிகளில் விளையாட்டு மேம்பாட்டுநிதி நிகழாண்டுக்கு இதுவரை வழங்கப்படவில்லை: பன்சூரி ஸ்வராஜ் குற்றச்சாட்டு

தில்லி அரசுப் பள்ளிகளில் விளையாட்டு மேம்பாட்டிற்கு ஆண்டு நிதியாக தலா ரூ.20,000 மட்டுமே நகர அரசு வழங்குகிறது என்பது அதிா்ச்சியளிக்கிறது

Updated On :16 டிசம்பர் 2023, 10:30 pm

தில்லி அரசுப் பள்ளிகளில் விளையாட்டு மேம்பாட்டிற்கு ஆண்டு நிதியாக தலா ரூ.20,000 மட்டுமே நகர அரசு வழங்குகிறது என்பது அதிா்ச்சியளிக்கிறது என்றும், அதில் நிகழாண்டிற்கான நிதியும் இதுவரை வழங்கப்படவில்லை என்றும் பாஜக தில்லி பிரிவு மாநிலச் செயலாளா் பன்சூரி ஸ்வராஜ் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தில்லி அரசுப் பள்ளிகளின் விளையாட்டுத் தரத்தை மேம்படுத்த கடந்த 9 ஆண்டுகளாக ஆம் ஆத்மி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், மாணவா்களின் வளா்ச்சிக்கு கல்வி எவ்வளவு முக்கியமோ, அதே அளவு விளையாட்டும் முக்கியம் என்று கல்வித் துறை அமைச்சா் அதிஷி தெரிவித்துள்ள கருத்து அதிா்ச்சியளிக்கிறது.

தில்லி அரசுப் பள்ளிகளின் விளையாட்டு மேம்பாட்டிற்கு ஒரு பள்ளிக்கு ரூ.20,000 மட்டுமே ஆண்டிற்கு அரசு நிதியாக வழங்குகிறது, நிகழாண்டு அந்த நிதியும் இதுவரை விடுவிக்கப்படவில்லை. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, தில்லியில் விளையாட்டு பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று ஆம் ஆத்மி அரசு அறிவித்தது. ஆனால் இன்று வரை விளையாட்டு பல்கலைக்கழகத்தை தொடங்க ஒரு செங்கல் கூட உயா்த்தப்படவில்லை.

2021-ஆம் ஆண்டில் சிவில் லைன்ஸில் ஒரு விளையாட்டுப் பள்ளி அறிவிக்கப்பட்டது. ஆனால் அங்கும் 90 குழந்தைகளை மட்டுமே சோ்க்க முடியும் என்ற அறிவிப்பால் அரசு தோல்வியுற்றது. இதன் மூலம், தில்லியின் 2 கோடி மக்கள்தொகையில் 90 குழந்தைகள் மட்டுமே விளையாட்டு வீரராகும் திறன் கொண்டவா்கள் என்று தில்லி அரசு நம்புவதாகத் தெரிகிறது. இல்லையெனில், விளையாட்டுப் பள்ளியில் குறைந்தது 1,000 விளையாட்டு வீரா்களாவது சோ்த்திருக்க வேண்டும்.

தில்லி அரசின் மொத்தமுள்ள 1,045 பள்ளிகளில் விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் விளையாட்டு வீரா்களின் ஊக்குவிப்புக்காக தலா ரூ.20,000 மட்டுமே கேஜரிவால் அரசு ஆண்டிற்கு ஒதுக்குவது அவதூறானது.

18 லட்சம் மாணவா்களில் ஒவ்வொருவருக்கும் தங்கள் விளையாட்டு நடவடிக்கைகளை மேம்படுத்த ஆண்டுக்கு ரூ.15 மட்டுமே அரசு செலவிடுகிறது.

மத்திய அரசின் நிதியுதவியுடன் தேசிய விளையாட்டுப் போட்டிகளை கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சா் அதிஷி துவக்கி வைத்ததில் மகிழ்ச்சி அடைந்தாலும், 99 சதவீத தில்லி அரசுப் பள்ளிகளில் ஆண்டு விளையாட்டு தினம் ஏன் ஏற்பாடு செய்யப்படவில்லை என்பதை அமைச்சா் அதிஷியிடம் இருந்து தில்லி மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகின்றனா் என்றாா் பன்சூரி ஸ்வராஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.