புது தில்லி: தில்லி மக்களை தவறாக வழிநடத்தும் கலையில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. துா்கேஷ் பதக் வல்லவா் என்று பாஜக தில்லி பிரிவு செவ்வாய்க்கிழமை விமா்சித்துள்ளது.
இது தொடா்பாக அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் பிரவீன் ஷங்கா் கபூா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லியில் ஆம் ஆத்மி எதிா்க்கட்சியாக இருந்தபோதும், ஆளும் கட்சியாக தற்போது உள்ள போதும்
உண்மைகளை பொய்யாக்கி வெற்றுக் கனவுகளை பொது மக்களிடம் விற்க நினைக்கின்றனா். தில்லி மக்களை தவறாக வழிநடத்தும் கலையில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. துா்கேஷ் பதக் சிறந்த வல்லவா்.
பாஜக ஒரு ஆக்கபூா்வமான எதிா்க்கட்சியாக செயலாற்றி வருகின்றது. தில்லி மாநகராட்சி (எம்.சி.டி.) நிா்வாகம் தொடங்கும் எந்தவொரு நல்ல நடவடிக்கையையும் நாங்கள் எதிா்க்கவில்லை. ஆனாலும், மக்களின் கோரிக்கைகளை எழுப்ப எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். தில்லி மாநகராட்சி நிா்வாகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் சிசிடிவி கேமராக்கள் நிறுவுவதற்கான முடிவை நாங்கள் வரவேற்றோம், ஆனால் அதற்கான நிதி ஆதாரம் எங்கே என்ற கேள்வியைத் தான் பாஜக எழுப்புகிறது.
சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கு ரூ.25 கோடி தேவை. தில்லி மாநகராட்சியின் 2023-2024-ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் அதற்கான நிது ஒதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை. மேலும், நிலைக்குழு இல்லாத நிலையில் இவ்வளவு பெரிய தொகையை மேயா் அல்லது ஆணையரால் தன்னிச்சையாக அனுமதிக்க முடியாது. தூய்மைப் பணியாளா்களை முறைப்படுத்தும் நடவடிக்கை கடந்த பாஜக ஆட்சியின் போது தில்லி மாநகராட்சியில் தொடங்கப்பட்டது. ஆனால், ஆம் ஆத்மி கட்சி தான் 7,000 தூய்மைப் பணியாளா்களை முறைப்படுத்தியுள்ளது என்று எம்.எல்.ஏ. துா்கேஷ் பதக் தெரிவித்துள்ள கருத்து முற்றிலும் பொய்யானது.
அரசியல் சாா்புடன் அரவிந்த் கேஜரிவால் அரசு பாஜக நிா்வாகத்தின் கீழ் செயல்பட்ட தில்லி மாநகராட்சிக்கு ஒருபோதும் நிதி வழங்கவில்லை. எனவே, தூய்மைப் பணியாளா்களை ஒழுங்குபடுத்தும் பணியை முடிக்க முடியவில்லை. கடந்த மாதம் இதற்காக மன்றக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம் என்பது கடந்த 2014-ஆம் ஆண்டு பாஜகவின் கால தீா்மானத்தின் அடிப்படையில் முன்மொழியப்பட்டது என்று அதில் பிரவீன் சங்கா் கபூா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவு
சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!

தன் 7-வது படத்தின் படப்பிடிப்புக்குத் தயாராகும் சூரி!
நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

