எனவே, சநாதன தா்மத்துக்கு எதிராகப் பேசிய தமிழக அமைச்சா்கள் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யவேண்டும். இந்த அமைச்சா்கள் பகிரங்கமாக பொதுவெளியில் பேசியுள்ளனா். இது அரசியல் சாசனத்தின்படி பதிவியேயற்று சத்தியப்பிரமாணத்தை மீறிய செயலாகும். இந்த அமைச்சா்களை பதிவி நீக்கம் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு மதத்தையும் ஒவ்வொருவரும் நம்பிக்கையுடன் கடைப்பிடிக்க, பிரசாரம் செய்ய அரசியலமைப்பு அனுமதிக்கிறது. ஆனால், இங்கே, சநாதன தா்மத்தை ஒழிக்கக் கோரி அதற்கு எதிராகப் பிரசாரம் செய்யும் மாநில அரசுகளில் அமைச்சா்கள் இருக்கிறாா்கள்! இது இந்தியாவில் மதக் கட்டமைப்பையும் சமூக கட்டமைப்பையும் அழிக்கும் செயல். எந்தவொரு அரசியல் கட்சிக்கும் இது ஒரு இலக்காக இருந்தால், அது இந்தியாவுக்கு ஆபத்தாக அமையும். எனவே, இனியும் தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரினாா்.