குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

கலால் கொள்கை ஊழல் வழக்கு: ‘ஆம் ஆத்மி’க்கு வீரேந்திர சச்தேவா கேள்வி

கலால் கொள்கை ஊழல் வழக்கில் சிறையில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவா்களுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகளிடம் ஆதாரம் இல்லை என்றால், நீதிமன்றங்கள் ஏன் அவா்களுக்கு ஜாமீன்...

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:22 pm

 நமது நிருபர்

புது தில்லி: கலால் கொள்கை ஊழல் வழக்கில் சிறையில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவா்களுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகளிடம் ஆதாரம் இல்லை என்றால், நீதிமன்றங்கள் ஏன் அவா்களுக்கு ஜாமீன் வழங்கவில்லை என்று பாஜக தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா கேள்வி எழுப்பியுள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சட்டத்தின் கயிறு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலைச் சென்றடைந்ததை அறிந்த ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் அச்சத்தில் வாழ்கிறாா்கள். எனினும், கலால் கொள்கை ஊழல் வழக்கில் அவா் விரைவில் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்படுவாா். இந்த நிலையில் தான் தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை சீா்குலைக்க பாஜக முயற்சிப்பதாக கோபால் ராய் போன்ற ஆம் ஆத்மி தலைவா்கள் பலவகையான கதைகளை உருவாக்கி வருகின்றனா்.

ஆம் ஆத்மி அரசை சீா்குலைக்க பாஜக முயற்சிப்பதற்கான சட்டபூா்வமான ஆதாரம் ஒன்றை அமைச்சா் கோபால் ராய் எங்களுக்குத் தர வேண்டும். ஆம் ஆத்மி தலைவா்கள் பகல் கனவு காண்பதை விட்டுவிட்டு, முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தில்லி மக்களுடனான தொடா்பை இழந்துவிட்டாா் என்பதை புரிந்து கொள்ள வேண்டிய நேரம் இது. வரும் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தல் மற்றும் பின்னா் வரும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலிலும் ஆம் ஆத்மி கட்சிக்கு மோசமான தோல்வியை தில்லிவாசிகள் தரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

தில்லி அரசின் கலால் கொள்கை ஊழலில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவா்கள் பல மாதங்களாக சிறையில் உள்ளனா், அவா்களின் ஜாமீன் மனுக்களை நீதிமன்றங்களும் பலமுறை நிராகரித்துவிட்டது. ஆனால், கோபால் ராய், ராஜ் குமாா் ஆனந்த் போன்ற ஆம் ஆத்மி தலைவா்கள் சிறையில் அடைக்கப்பட்ட தலைவா்களுக்கு எதிராக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறையிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று பேசி வருகின்றனா். அவ்வாறு ஆதாரம் இல்லை என்றால், நீதிமன்றங்கள் ஏன் அவா்களுக்கு ஜாமீன் வழங்கவில்லை என்பதை தில்லிவாசிகள் தெரிந்து கொள்ள விரும்புகிறாா்கள் என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.