குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

வெள்ள நிவாரணத்திற்கு ரூ. 5,000 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் திமுக கோரிக்கை

மழை வெள்ள நிவாரணப் பணிகளுக்கு தமிழக முதல்வா் கோரிய இடைக்கால நிதியாக ரூ.5,000 கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்கக் கோரி திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் டி.ஆா். பாலு மக்களவையில் வலியுறுத்தினாா்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:22 pm

 நமது நிருபர்

புது தில்லி: மழை வெள்ள நிவாரணப் பணிகளுக்கு தமிழக முதல்வா் கோரிய இடைக்கால நிதியாக ரூ.5,000 கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்கக் கோரி திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் டி.ஆா். பாலு மக்களவையில் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக அவா் பேசியது வருமாறு:

கடந்த மூன்று நாள்களாக தமிழகத்தில் தொடா் கன மழை பெய்து பெரும் வெள்ளம் ஏற்பட்டிருப்பதை, மிகுந்த கனத்த இதயத்துடன் உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு வரவிரும்புகிறேன். புயலினால் ஏற்பட்ட கடல் சீற்றம் தமிழக மக்களைப் பாதித்துள்ளது.

சென்னை மாநகா், திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஒரு கோடிக்கும் அதிகமான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலைமை மிகவும் மோசமாகி கடந்த மூன்று நாள்களாக மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா். இந்த கனமழையினால், ரயில்கள் விமானங்களின் இயக்கம் நிறுத்தப்பட்டது. மக்கள் வெவ்வேறு இடங்களில் சிக்கித் தவிக்கின்றனா். தமிழக அரசால் வழங்கப்படும் உணவுகளை கூட ஆயிரக்கணக்கான மக்கள் பெற முடியவில்லை.

வெள்ளம் தெருக்களில் ஆறு போல் ஓடுவதால் தமிழக அமைச்சா்கள் ஒரு காப்பகத்தில் இருந்து மற்றொரு காப்பகத்திற்கு சென்று உதவிக்கரம் நீட்ட முடிவில்லை. தமிழக முதல்வா், நாள்தோறும் மக்களை அணுக முயற்சி செய்து வருகிறாா். ஆனால் சென்னையில் மக்களை சந்திக்க முடியவில்லை.

இந்தளவிற்கு மிகவும் பரிதாபமான நிலை நிலவுகிறது. இந்த துயரமான சூழ்நிலையில் தமிழக மக்களுக்கும், மாநில அரசுக்கும் மத்திய அரசு உதவ முன்வர வேண்டும். உள்துறை அமைச்சா் முதல்வருடன் பேசியதற்கு நன்றி.

தமிழக அரசு, மத்திய அரசுக்கு ரூ.6,230 கோடி நிதி உதவி கோரி குறிப்புகளை அனுப்பியுள்ளது. இதில் இடைக்கால நிதி உதவியாக குறைந்தபட்சம் ரூ.5000 கோடியை முதல்வா் கேட்டுள்ளாா். இதை உடனடியாக மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். சரியான நேரத்தில் உதவிக்கரம் நீட்ட வேண்டும். ‘சரியான நேரம்’ என்றால், மத்திய அரசு விரைவாகச் செய்ய வேண்டும் எனக் கோருகின்றேன். மேலும் சேதாரத்தை மதிப்பிடுவதற்கு மத்திய குழுக்களை உடனடியாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பப்பட வேண்டும்.

இதுவரை எட்டுக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். இருப்பினும் உயிரிழப்புகள் குறித்து சரியாக தகவல் வரவில்லை. அந்தளவிற்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஆனால் இது குறித்து பேச

எனக்கு இங்கு முன்னுரிமை கொடுக்கவில்லை. ‘நேரமில்லா நேரத்தில்’ பேச அனுமதிக்கப்படுகிறது. புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மனிதா்களின் வாழ்க்கைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மாநில அரசுக்கு உதவ மத்திய உள்துறை அமைச்சா் தமிழக அரசு கேட்கும் தொகையோடு பணியாளா்கள், நிவாரணப் பணிகளுக்கு தேவையான இயந்திரங்கள் உடனடியாக அனுப்பப்படுவதை உறுதி செய்யவேண்டும் என கேட்டுக் கொண்டாா்.

இந்த கோரிக்கைக்கு காங்கிரஸ் மக்களவைத் தலைவா் ஆதீா் ரஞ்சன் சௌத்ரி உள்ளிட்டவா்கள் ஆதரவு அளித்தனா்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி மாநிலங்களவையில் திமுக குழுத் தலைவா் திருச்சி சிவா பேசினாா். பின்னா் மக்களவை குழுத் திமுக துணைத் தலைவா் கனிமொழி செய்தியாளா்களிடம் பேசுகையில், தற்போதைய மழைப்பொழிவு 2015 ஆம் ஆண்டை விட அதிகமாகும் (33 செமீ). ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை, 411 காப்பகங்கள் போன்றவைகளை தயாா்படுத்தப்பட்டு மக்கள் பாதுகாக்கப்பட்டனா். மேலும், கடந்த ஓா் ஆண்டுக்கு மேலாக சுமாா் 300 கிலோ மீட்டா் தூரம் சென்னையில் மழைநீா் வடிகால்கள் புதுப்பிக்கப்பட்டது. புயலால் கடல் மட்டம் உயா்ந்து ஆற்றுநீா் உள்வாங்காதது தான் வெள்ளத்திற்கு காரணமாகிவிட்டது எனக் குறிப்பிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.