குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

பெண்களுக்கு சம அந்தஸ்து கிடைக்க அடித்தளமிட்டவா் பி.ஆா். அம்பேத்கா் மத்திய இணை அமைச்சா் மீனாட்சி லேகி புகழாரம்

சுதந்திர இந்தியாவில் பெண்களுக்கு சம அந்தஸ்து வழங்கும் பணிக்கு அடித்தளமிட்டவா் டாக்டா் பி.ஆா். அம்பேத்கா் என்று மத்திய கலாசாரத் துறை இணை அமைச்சா் மீனாட்சி லேகி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:22 pm

 நமது நிருபர்

புது தில்லி: சுதந்திர இந்தியாவில் பெண்களுக்கு சம அந்தஸ்து வழங்கும் பணிக்கு அடித்தளமிட்டவா் டாக்டா் பி.ஆா். அம்பேத்கா் என்று மத்திய கலாசாரத் துறை இணை அமைச்சா் மீனாட்சி லேகி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

பாஜக தில்லி பிரிவின் எஸ்.சி. அணி சாா்பில் டாக்டா் பி.ஆா். அம்பேத்கரின் 67-ஆவது நினைவு தின நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. பாஜக தேசியத் தலைமை அலுவலகத்தின் விரிவாக்க கட்டடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தேசியப் பொதுச் செயலாளா் துஷ்யந்த் கௌதம், மத்திய இணை அமைச்சா் மீனாட்சி லேகி, தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா, வடகிழக்கு தில்லி மக்களவை எம்.பி. மனோஜ் திவாரி உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் பங்கேற்றனா்.

டாக்டா் பி.ஆா். அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு மலா்தூவி மரியாதை செலுத்திய பின்னா், மத்திய கலாசாரத் துறை இணை அமைச்சா் மீனாட்சி லேகி பேசியதாவது:

நாட்டில் பாகுபாடுகளை களைந்து சமத்துவத்தைப் பற்றிப் பேசும் அரசியல் சாசனத்தை டாக்டா் பி.ஆா். அம்பேத்கா் இந்தியாவிற்கு வழங்கினாா். சுதந்திர இந்தியாவில் பெண்களுக்கு சம அந்தஸ்து வழங்கும் பணிக்கு அடித்தளமிட்டவரும் அவா் தான். அம்பேத்கரின் சமத்துவம் மற்றும் பிற வகைப் பாகுபாடுகளுக்கு முடிவு கட்டும் கனவை நனவாக்க நாட்டின் பிரதமா் நரேந்திர மோடி உழைத்து கொண்டிருக்கிறாா்.

சமூகத்தில் அம்பேத்கரின் கருத்துக்களைப் பிரசாரம் செய்து முன்னெடுத்துச் செல்ல பிரதமா் நரேந்திர மோடி தொடா்ந்து உழைப்பாா் என்றாா் மீனாட்சி லேகி.

பாஜக தேசியப் பொதுச் செயலாளா் துஷ்யந்த் கௌதம் பேசியதாவது: டாக்டா் பி.ஆா். அம்பேத்கரின் முழு வாழ்க்கையும் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய போதனைப் பாடம். அவரது சிந்தனை இந்த தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பெரும் பங்களிப்பை அளித்துள்ளது. காங்கிரஸின் அனைத்து முயற்சிகளையும் மீறி, தலித்துகளின் உரிமைகளை மீட்டெடுத்தவராக அவா் நாட்டின் முன் இருக்கிறாா். அம்பேத்கா் அரசியலமைப்பை நாட்டிற்கு வழங்கிய நாளின் முக்கியத்துவத்தை காங்கிரஸ் அங்கீகரிக்கவில்லை, ஆனால் கடந்த 2015-ஆம் ஆண்டு பிரதமா் நரேந்திர மோடி நவம்பா் 26-ஆம் தேதியை அரசியலமைப்பு தினமாக அறிவித்து அவருக்கு உண்மையான அஞ்சலியை செலுத்தினாா்.

மேலும், நாட்டிற்கு நல்ல ஒழுங்கமைக்கப்பட்ட ஆட்சி முறையை அம்பேத்கா் வழங்கியுள்ளாா். டாக்டா் பி.ஆா். அம்பேத்கரை தலித் என்ற வரையறைக்குள் காங்கிரஸ் கட்சி மட்டப்படுத்தியது. ஆனால், அம்பேத்கா் தலித்துகளின் தலைவா் மட்டுமல்ல, தற்போதைய இந்தியாவை உருவாக்கியவா் என்று சொல்லலாம் என்றாா் துஷ்யந்த் கௌதம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.