விசாரணைக் காவல் முடிந்து கடந்த திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த அழைத்து வரும் போது ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிகை பொய்களின் மலையாக உள்ளது. இந்த நாட்டில், மோடிக்கு எதிராக குரல் எழுப்பினால், பொய்யான குற்றச்சாட்டுகள், போலி குற்றப்பத்திரிகை, பிறகு சிறை ஆகியவை தண்டனையாக கிடைக்கும். ஆனால், இந்த சிறைக் கம்பிகள் ஊழல்வாதிகளை பயமுறுத்தலாம். ஆம் ஆத்மி கட்சியின் உறுதியான நோ்மையாளா்களை அல்ல என்று தெரிவித்திருந்தாா்.